ஆப்நகரம்

தமிழக சமூகப் பாதுகாப்புத்துறையில் வேலை!

தமிழக அரசின் சமூக பாதுகாப்புத் துறையில் காலியாக உள்ள சமூகப் பணியாளர் பணியிடம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படுகிறது.

Samayam Tamil 21 Mar 2020, 1:55 pm
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து மார்ச் 20 ஆம் தேதி வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, தமிழக அரசின் சமூகப்பாதுகாப்புத்துறையின் கீழ் அரியலூரில் செயல்பட்டு வரும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில், சமூகப் பணியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
Samayam Tamil Ariyalur Child Protection Recruitment 2020


இது தற்காலிக பணியிடம் ஆகும். ஒரு வருட ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படுகிறது. தகுதியுள்ளவர்கள் தற்காலிக பணியிடம் என்று பாராமல் விண்ணப்பிக்கும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள். அடுத்தடுத்து வரக்கூடிய வேலைவாய்ப்புகளிலும், அரசு வேலைகளிலும் முன்னுரிமை பெறுவதற்கு இந்த பணி அனுபவம் பயனுள்ளதாக இருக்கும்.

சமூகப் பணியாளர் பணிக்கு ஒரே ஒரு காலியிடம் மட்டும் உள்ளது. இதற்கு ஏதாவது ஒரு டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். குழந்தைகள் சார்ந்த பணியில் 2 ஆண்டுகள் முன்அனுபவம் இருக்க வேண்டும். உளவியல் / சமூகப்பணி / சமூகவியல் வழிகாட்டுதல் மற்றும் ஆற்றுப்படுத்துதல் ஆகிய துறைகளில் டிகிரி முடித்தவர்ளுக்கு முன்னுரிமை உண்டு.

மேற்கண்ட சமூகப்பணியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள், www.ariyalur.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க மார்ச் 31 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவம் அனுப்ப வேண்டிய முகவரி:
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,
இரண்டாவது தளம், அரசு பல்துறை வளாகம்,
ஜெயங்கொண்டம் சாலை,
அரியலூர் – 621 704
Ariyalur Child Protection Recruitment 2020 Official Notification PDF

அடுத்த செய்தி