ஆப்நகரம்

Ford Layoffs : 3800 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டிருக்கும் போர்டு கார் நிறுவனம்!

ஐரோப்பிய நிறுவனங்களையும் தாக்க ஆரம்பித்துள்ள பணிநீக்கம். அடுத்த 3 ஆண்டுகளுக்குள் 3000த்திற்கும் மேற்பட்ட ஐரோப்பிய ஊழியர்களை பணிநீக்கம் செய்யப் போவதாக அறிவித்துள்ளது அமெரிக்காவை சேர்ந்த கார் உற்பத்தி நிறுவனமான Ford. இதனால், ஐரோப்பிய ஊழியர்களும் தற்போது பணிநீக்க பயத்திற்கு ஆளாகியுள்ளனர்.

Authored byசுபாஷ் சந்திர போஸ் | Samayam Tamil 15 Feb 2023, 3:25 pm
ஐரோப்பாவை பெரிதும் நெருங்காமல் இருந்த Mass Layoff தற்போது கொஞ்சம் கொஞ்சமாக அமெரிக்க நிறுவனங்களில் இருந்து நகர்ந்து ஐரோப்பிய நாடுகளை தாக்க ஆரம்பித்துள்ளது. அதன் அடையாளமாய் அடுத்த மூன்று வருடங்களில் ஐரோப்பியாவில் மட்டும் 3800 பணிநீக்கங்களை செய்ய FORD நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் அதிகரித்து வரும் செலவினங்களை குறைப்பதற்காகவும் தங்களது உற்பத்தியை முறைப்படுத்தவும் இந்த முடிவை எடுத்திருப்பதாக நிறுவன தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil Ford Layoffs


ஐரோப்பாவில் போர்டு பணிநீக்கம்!
ஜெர்மனியில் 2300 பிரிட்டனில் 1300 மற்றும் இதர ஐரோப்பிய பகுதிகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட பணிநீக்கத்தை மேற்கொள்ள இருக்கிறது Ford நிறுவனம். நேரடியாக பணிநீக்கமாக மேற்கொள்ளாமல் ஊழியர்களாக பணிவிலகும் வகையில் நடைமுறை படுத்த உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஐரோப்பிய சந்தை!
உலக நெருக்கடியின் விளைவுகளை எதிர்கொள்வதற்காக அமெரிக்க நிறுவனங்கள் பலவும் கடந்த சில மாதங்களாக பெரும் பணிநீக்கத்தை செய்து வருகின்றன. குறிப்பாக அமேசான், மெட்டா, ட்விட்டர், கூகுள் உள்ளிட்ட நிறுவனங்கள் கூட ஆயிரக்கணக்கில் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பி வருகின்றன. ஆனால், ஐரோப்பிய சந்தை கொஞ்சம் நிலையாகதான் இருக்கிறது. இன்னும் பெரிய அளவிலான பணிநீக்கங்கள் துவங்கவில்லை என்று நிபுணர்கள் கூறி வந்தனர்.

Ford நிறுவனத்தின் தலைவர் கருத்து!
இந்த நிலையில் Ford நிறுவனத்தின் இந்த அறிவிப்பு ஐரோப்பியர்கள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆனால், இது குறித்து பேசியுள்ள ஐரோப்பிய எலக்ட்ரிக் வாகன தலைவர் மற்றும் ஜெர்மனி Ford நிறுவனத்தின் தலைவருமான மார்ட்டின் சேண்டர், அமெரிக்காவில் இருந்து வரும் தொழிநுட்பங்களை பயன்படுத்தி ஐரோப்பியாவுக்கு ஏற்றவாறு வாடிக்கையாளர்களுக்கு தேவையான ப்ராடக்ட்டை தயாரித்து கொடுப்பதற்காக 3,400 பொறியாளர்களை வைத்து கொள்ள போவதாக கூறியுள்ளார்.

அதே போல், தொடர்ந்து எலக்ட்ரிக் வாகனத்தை வெளியிடுதல் மற்றும் அதற்கான உற்பத்தி தளத்தை ஐரோப்பாவில் அமைப்பது தொடர்பாகவும் பணிகள் நடந்து வருவதாக அவர் கூறியுள்ளார். தற்போது திட்டமிட்டுள்ள 3800 பணிநீக்கங்கள் ப்ராடக்ட் டெவலப்மென்ட் மற்றும் அட்மினிஸ்ட்ரேஷன் ஆகிய துறைகளில் இருந்து ஊழியர்களை வெளியேற்ற உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
எழுத்தாளர் பற்றி
சுபாஷ் சந்திர போஸ்
சுபாஷ் கடந்த நான்கு வருடங்களாக ஊடகத்துறையின் முன்னணி டிஜிட்டல் தளங்களில் கான்டென்ட் எழுதுபவராகவும் மற்றும் செய்தி நிறுவனங்களில் கள நிருபராகவும் பணியாற்றிய அனுபவமுள்ளவர். இயல்பில் எந்த துறை சார்ந்து எழுதும் ஆர்வம் கொண்ட சுபாஷ் தற்போது கல்வி, ஆரோக்கியம், உறவுகள் குறித்து எழுதி வருகிறார். அரசியல் மற்றும் உறவுகள் குறித்த துறையில் ஆர்வம் மிக்கவர். அவர் ஒரு lepidopterist, bibliophile மற்றும் anthophile ஆவார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி