ஆப்நகரம்

8 மாத கர்ப்பிணி பெண்ணுக்கு அதிர்ச்சி கொடுத்த கூகுள் CEO சுந்தர்பிச்சை!

Google நிறுவனம் தொடர்ந்து தனது ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகிறது. இதுவரை முதற்கட்டமாக 12,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. அந்த லிஸ்ட்டில் 8 மாத கர்ப்பிணி பெண்ணும் ஒருவர். தற்போது பணியிலிருந்து நீக்கப்பட்டதால் மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக தனது லின்க்டின் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Authored byசுபாஷ் சந்திர போஸ் | Samayam Tamil 23 Jan 2023, 10:51 am
சமீபத்தில் கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் இன்க் தன்னுடைய 12,000 ஊழியர்களை ஒரே மெயிலில் வீட்டிற்கு அனுப்பியது. கூகுள் நிறுவன தலைமை செயலதிகாரி சுந்தர்பிச்சை இது சம்மந்தமாக நீண்ட கடிதம் ஒன்றை அனைத்து ஊழியர்களுக்கும் அனுப்பியிருந்தது வைரலாகியது.
Samayam Tamil google layoff


இந்த பணிநீக்க வரிசையில் கர்ப்பக்கால விடுப்பு எடுக்க இருந்த நன்றாக பணியாற்றும் கர்ப்பிணி பெண் ஒருவரையும் நீக்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது. கூகுள் நிறுவனத்தில் ப்ரோக்ராம் மேனேஜராக பணிபுரியும் கேத்தரின் வோங் 8 மாத கர்ப்பிணி ஆவார்.

இது குறித்து கேத்தரின் லின்க்டின் தளத்தில் விரிவான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். முதலில் என் மூளைக்குள் வந்த கேள்வி ஏன் நான்? என்பதுதான். சமீபத்தில் வந்த பாசிட்டிவ் ரிவியூவுக்கு பிறகும் என்னை ஏன் பணிநீக்கம் செய்தார்கள் என்பது எனக்கு புரியவில்லை.

பல்வேறு இக்கட்டான சூழல்களிலும் கூட கடினமான சவால் நிறைந்த பணிகளை நான் செய்துள்ளேன். இருப்பினும் எப்படி இந்த லிஸ்டில் நானும் சேர்ந்தேன் என்று தெரியவில்லை. 34 வார கர்ப்பமாக இருக்க கூடிய நிலையில் நான் எப்படி புதிய வேலையை தேடுவது? என்று அவர் எழுதியுள்ளார்.

மேலும், பலரும் என் குழந்தையை பற்றி கவலைப்படுகிறார்கள். என் வயிற்றில் உள்ள அந்த குழந்தையை என் நெகட்டிவ் எண்ணங்கள் பரவ நான் அனுமதிக்கமாட்டேன். ஆனால், இன்னும் என் கைகள் நடுங்குவதை என்னால் நிறுத்தமுடியவில்லை.

இது பல உணர்வுகள் கலந்த கலவையாக இருக்கிறது. கூகுள் நிறுவனத்தில் பணி புரிந்ததில் எனக்கு பெருமையே. அது மட்டுமின்றி எனது அணியினரை நான் மிகவும் நேசிக்கிறேன். காரணம், நாங்கள் ஒரு குடும்பம் போலவே செயல்பட்டோம்.

மிக மோசமான சூழல்களில் நிறுவனத்தை பாசிட்டிவ் வழியில் முன்னேற்றத்திற்கு கொண்டு செல்ல ஒரு பகுதியாக இருந்தோம் என்று அவர் அந்த பதிவில் எழுதியுள்ளார். தனது குழந்தை பிறந்த பிறகு மீண்டும் வேறு பணிக்காக முயற்சிக்க போவதாக தெரிவித்துள்ளார். இது குறித்து பல சமூகவலைத்தள வாசிகளும் கலவையான விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.
எழுத்தாளர் பற்றி
சுபாஷ் சந்திர போஸ்
சுபாஷ் கடந்த நான்கு வருடங்களாக ஊடகத்துறையின் முன்னணி டிஜிட்டல் தளங்களில் கான்டென்ட் எழுதுபவராகவும் மற்றும் செய்தி நிறுவனங்களில் கள நிருபராகவும் பணியாற்றிய அனுபவமுள்ளவர். இயல்பில் எந்த துறை சார்ந்து எழுதும் ஆர்வம் கொண்ட சுபாஷ் தற்போது கல்வி, ஆரோக்கியம், உறவுகள் குறித்து எழுதி வருகிறார். அரசியல் மற்றும் உறவுகள் குறித்த துறையில் ஆர்வம் மிக்கவர். அவர் ஒரு lepidopterist, bibliophile மற்றும் anthophile ஆவார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி