ஆப்நகரம்

CEO சுந்தர் பிச்சை சம்பளத்திலேயே கைவைத்த Google நிறுவனம்! உச்சம் தொடும் Global Recession!

உலக அளவில் தினம்தோறும் நடந்து வரும் ஆயிரக்கணக்கான ஊழியர்களின் பணிநீக்க செய்திகளுக்கு மத்தியில் உலகின் மிக பெரும் நிறுவனங்களும் கூட தங்களது தலைமை நிர்வாகிகளின் சம்பளத்தை குறைக்கும் செய்து நெருக்கடி நிலையின் தீவிரத்தை காட்டுகிறது. குறிப்பாக டெக் துறையின் முன்னணி நிறுவனமான கூகுள் அதன் CEO சுந்தர் பிச்சையின் சம்பளத்தை குறைக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Authored byசுபாஷ் சந்திர போஸ் | Samayam Tamil 30 Jan 2023, 2:27 pm
ஆப்பிள் நிறுவனத்தின் சிஇஓ டிம் குக்கின் சம்பள குறைப்புக்கு பிறகு, தற்போது டெக் துறையின் தனிப்பெரும் நிறுவனமான கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சையின் சம்பளத்தை குறைக்க போவதாக கூகுள் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆப்பிள் நிறுவனரின் சம்பளம் 2023ஆம் நிதி ஆண்டிற்கு 40% குறைக்கப்படுவதாக அந்த நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டிருந்தது.
Samayam Tamil sundar pichai pay cut


தலைமை அதிகாரிகளுக்கு போனஸ் கட்!

ஏற்கனவே, 12,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்து விட்டு நடந்த கூட்டத்தில் பேசிய சுந்தர்பிச்சை துணை தலைவர் பதவிக்கு மேல் வரும் அனைத்து பொறுப்புகளை வகிக்கும் தலைமை நிர்வாக அதிகாரிகளுக்கு இந்தாண்டு போனஸில் குறைவு ஏற்படும் என்று சுந்தர்பிச்சை தெரிவித்திருந்தார்.

அதன் வெளிப்பாடாகவும், உலக நெருக்கடியின் தாக்கத்தை குறைக்கவும் சுந்தர்பிச்சை இந்த முடிவுக்கு ஒப்பு கொள்ள வாய்ப்புள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அது மட்டுமின்றி அந்த கூட்டத்தில் பேசும்போது கூட எவ்வளவு போனஸ் குறையும் என்றும், தனக்கும் இந்த விதி பொருந்துமா என்பது குறித்தும் அவர் பேசாதது குறிப்பிடத்தக்கது.

முன்பே கணித்த சுந்தர்பிச்சை!

12,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதற்கான அறிவிப்பை வெளியிடுவதற்கு சில வாரங்களுக்கு முன்புதான் சுந்தர்பிச்சையின் சம்பளம் கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்இன்க்கால் அதிகரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்திய தகவல்களின்படி, அவரின் நெட் ஒர்த் 20 சதவீதம் குறைந்தாலும், உலகின் ரிச்சஸ்ட் மேலாளர்களில் முன்னணியில் இருக்கிறார்.

சுந்தர்பிச்சை சம்பளம்

தரவுகளின்படி, சுந்தர்பிச்சைக்கு PSUக்களில் இருந்து இரண்டு தவணைகளாக இலக்கு மதிப்பிலிருந்து 63 மில்லியன் டாலர் மற்றும் ஆல்பாபெட் ரெஸ்டரிக்டட் ஸ்டாக் யூனிட்டிலிருந்து 84 மில்லியன் டாலர் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
எழுத்தாளர் பற்றி
சுபாஷ் சந்திர போஸ்
சுபாஷ் கடந்த நான்கு வருடங்களாக ஊடகத்துறையின் முன்னணி டிஜிட்டல் தளங்களில் கான்டென்ட் எழுதுபவராகவும் மற்றும் செய்தி நிறுவனங்களில் கள நிருபராகவும் பணியாற்றிய அனுபவமுள்ளவர். இயல்பில் எந்த துறை சார்ந்து எழுதும் ஆர்வம் கொண்ட சுபாஷ் தற்போது கல்வி, ஆரோக்கியம், உறவுகள் குறித்து எழுதி வருகிறார். அரசியல் மற்றும் உறவுகள் குறித்த துறையில் ஆர்வம் மிக்கவர். அவர் ஒரு lepidopterist, bibliophile மற்றும் anthophile ஆவார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி