ஆப்நகரம்

மத்திய அரசு நிறுவனத்தில் டெக்னிக்கல் ஆபீசர் வேலை!

ECIL Recruitment 2020: Electronics Corporation of India நிறுவனத்தில் தொழில்நுட்ப அதிகாரி (Technical Officer) வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது,

Samayam Tamil 20 Jan 2020, 12:07 pm
ECIL எனப்படும் மத்திய அரசு நிறுவனத்தில் டெக்னிக்கல் ஆபீசர் பணிக்கு நேர்காணல் நடக்கிறது. இதற்கு பி.இ., முடித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.
Samayam Tamil ECIL


அணு சக்தி துறையின் ஒரு அங்கமாக ECIL (Electronics Corporation of India Ltd) செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் இரண்டு ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில், தொழில்நுட்ப அலுவலர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். மொத்தம் இரண்டு பிரிவுகளில் 2 காலியிடங்கள் உள்ளது.

தொழில்நுட்ப அதிகாரி பிரிவு 1 பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், ECE துறையில் முதல் வகுப்பில் பி.இ முடித்திருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறையில் ஒரு வருடம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். தொழில்நுட்ப அதிகாரி பிரிவு 2 பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், கம்ப்யூட்டர் சைன்ஸ், ECE ஏதேனும் ஒன்றில் 60 சதவீத மதிப்பெண்களுடன் பி.இ முடித்தருக்க வேண்டும்.

மேற்கண்ட பணியில் சேருவதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள், http://www.ecil.co.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து, ஜனவரி 30 ஆம் தேதி நடைபெறும் நேர்காணலில் நேரடியாக பங்கேற்கலாம்.

நேர்காணல் நடைபெறும் இடம்: ECIL Office, Guwahati

இது பற்றிய முழுமையான விவரங்களுக்கு, ECIL நிறுவனம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.
ECIL Recruitment 2020: Official Notification for Technical Officer Post Walk In Interview

அடுத்த செய்தி