கொரோனா தொற்றுநோய் தொடங்கிய பிறகு, உலகெங்கிலும் உள்ள நிறுவனங்களின் நிர்வாக சிந்தனையில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஏனென்றால், நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் நலனில் அதிக கவனம் செலுத்துகின்றன. அந்த வகையில், பெங்களூருவை சேர்ந்த வேக் ஃபிட் (Wakefit) நிறுவனம் தனது ஊழியர்களின் சௌகரியத்தில் இன்னும் ஒரு படி அதிக கவனம் செலுத்தியுள்ளது. அது என்னவென்றால், ஊழியர்கள் பணியில் இருக்கும் போது சிறிது நேரம் தூங்குவதற்கு (Short Nap) வாய்ப்பளித்துள்ளது. பணி நேரத்தில் ஊழியர்கள் அரை மணி நேரம் தூங்கலாம்....
ஊழியர்களின் நலன் கருதி இந்த மாபெரும் முயற்சியை எடுத்திருக்கும் நிறுவனத்தின் பெயர் வேக்ஃபிட் சொல்யூஷன் (Wakefit Solution). பெங்களூரில் உள்ள இந்த இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனம், இனி அலுவலகத்திற்கு வந்து பணிபுரியும் வரும் ஊழியர்கள், 30 நிமிடங்கள் அதாவது தினமும் பணி நேரத்தில் அரை மணி நேரம் தூங்கலாம் (Short Nap) என அறிவித்துள்ளது.
இந்த புதிய முயற்சியால் தனது பணியாளர்கள் உடல் மற்றும் மனரீதியாக ஆரோக்கியமாக இருப்பார்கள் என்றும் அத்துடன் அவர்கள் உற்சாகத்துடன் பணியாற்ற முடியும் என்றும் நிறுவன நிர்வாகம் கூறுகிறது. அந்தவகையில், ஊழியர்கள் தினமும் மதியம் 2 மணி முதல் 2.30 மணி வரை அரை மணி நேரம் அலுவலகத்தில் தூங்கலாம் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. ஊழியர்கள் தற்காலிகமாக தூங்குவதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் நிறுவனம் செய்துள்ளது.
இது குறித்த தகவலை நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளது. அதில், "மதிய உறக்கத்திற்கான நேரத்தில் அதன் ஊழியர்கள் பணி செய்யவேண்டியது இல்லை. ஊழியர்கள் தங்குதடையின்றி தூங்குவதை உறுதி செய்வதற்கு தூங்கும் அறைகள் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக" தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ் 'சமயம் தமிழ்' பக்கத்தை பின் தொடருங்கள்....
இந்த நிறுவனத்தின் இணை நிறுவனர் சைதன்யா ராமலிங்க கவுடா, அனைத்து ஊழியர்களுக்கும் மின்னஞ்சல் அனுப்புவதன் மூலம் இந்த முடிவைப் பற்றி தெரிவித்துள்ளார். தினமும் மதியம் அரை மணி நேரம் தூங்குவது ஒரு நபரை புத்துணர்ச்சியுடன் வைத்திருப்பதுடன் அவரது பணி செயல்திறன் 33 சதவீதம் மேம்படுகிறது என்று நாசா ஹோவர்ட் பல்கலைக்கழகத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது. ஊழியர்களும் நிறுவனத்தின் இந்த முடிவால் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர் மற்றும் பணியை மேம்படுத்துவதற்கான ஒரு நல்ல படி என்று அழைக்கிறார்கள்.
கடந்த 2019 ஆம் ஆண்டு வேக்ஃபிட் நிறுவனம் நடத்திய, "ரைட் டூ ஒர்க் நாப்ஸ்" என்ற கணக்கெடுப்பில் பங்கேற்ற 1,500 பேரில் 70% தங்களுக்கு தூங்குவதற்கு அறைகள் இல்லை என்றும், 86% பேர் குட்டித் தூக்கம் தான் தங்களின் செயல்திறனை அதிகரிப்பதாகவும் தெரிவித்திருந்தனர். இதையடுத்து, இந்த முயற்சியை நிறுவனம் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஊழியர்களின் நலன் கருதி இந்த மாபெரும் முயற்சியை எடுத்திருக்கும் நிறுவனத்தின் பெயர் வேக்ஃபிட் சொல்யூஷன் (Wakefit Solution). பெங்களூரில் உள்ள இந்த இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனம், இனி அலுவலகத்திற்கு வந்து பணிபுரியும் வரும் ஊழியர்கள், 30 நிமிடங்கள் அதாவது தினமும் பணி நேரத்தில் அரை மணி நேரம் தூங்கலாம் (Short Nap) என அறிவித்துள்ளது.
இந்த புதிய முயற்சியால் தனது பணியாளர்கள் உடல் மற்றும் மனரீதியாக ஆரோக்கியமாக இருப்பார்கள் என்றும் அத்துடன் அவர்கள் உற்சாகத்துடன் பணியாற்ற முடியும் என்றும் நிறுவன நிர்வாகம் கூறுகிறது. அந்தவகையில், ஊழியர்கள் தினமும் மதியம் 2 மணி முதல் 2.30 மணி வரை அரை மணி நேரம் அலுவலகத்தில் தூங்கலாம் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. ஊழியர்கள் தற்காலிகமாக தூங்குவதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் நிறுவனம் செய்துள்ளது.
இது குறித்த தகவலை நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளது. அதில், "மதிய உறக்கத்திற்கான நேரத்தில் அதன் ஊழியர்கள் பணி செய்யவேண்டியது இல்லை. ஊழியர்கள் தங்குதடையின்றி தூங்குவதை உறுதி செய்வதற்கு தூங்கும் அறைகள் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக" தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ் 'சமயம் தமிழ்' பக்கத்தை பின் தொடருங்கள்....
இந்த நிறுவனத்தின் இணை நிறுவனர் சைதன்யா ராமலிங்க கவுடா, அனைத்து ஊழியர்களுக்கும் மின்னஞ்சல் அனுப்புவதன் மூலம் இந்த முடிவைப் பற்றி தெரிவித்துள்ளார். தினமும் மதியம் அரை மணி நேரம் தூங்குவது ஒரு நபரை புத்துணர்ச்சியுடன் வைத்திருப்பதுடன் அவரது பணி செயல்திறன் 33 சதவீதம் மேம்படுகிறது என்று நாசா ஹோவர்ட் பல்கலைக்கழகத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது. ஊழியர்களும் நிறுவனத்தின் இந்த முடிவால் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர் மற்றும் பணியை மேம்படுத்துவதற்கான ஒரு நல்ல படி என்று அழைக்கிறார்கள்.
கடந்த 2019 ஆம் ஆண்டு வேக்ஃபிட் நிறுவனம் நடத்திய, "ரைட் டூ ஒர்க் நாப்ஸ்" என்ற கணக்கெடுப்பில் பங்கேற்ற 1,500 பேரில் 70% தங்களுக்கு தூங்குவதற்கு அறைகள் இல்லை என்றும், 86% பேர் குட்டித் தூக்கம் தான் தங்களின் செயல்திறனை அதிகரிப்பதாகவும் தெரிவித்திருந்தனர். இதையடுத்து, இந்த முயற்சியை நிறுவனம் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.