ஆப்நகரம்

UPSC IRMS: இனி ரயில்வே பணிக்கு RRB தேர்வுகள் கிடையாது! அதற்கு பதிலாக..

UPSC will conduct RRB Exams 2020: Railway Recruitment Board RRB தேர்வுகள் இனி கிடையாது. அதற்கு பதிலாக UPSC மூலம் IRMS ரயில்வே துறையில் ஊழியர் நியமனம் செய்யப்படுவார்கள்.

Samayam Tamil 27 Dec 2019, 1:40 pm
ரயில்வே துறை பணியில் சேருவதற்காக இதுவரையில் நடத்தப்பட்டு வந்த RRB தேர்வுகள் இனி கிடையாது. அதற்குப் பதிலாக UPSC எனப்படும் மத்திய குடிமைப்பணிகளுக்கான தேர்வு வாரியமே, ரயில்வே பணிக்கான தேர்வை நடத்தும்.
Samayam Tamil UPSC Will Conduct RRB


இந்திய ரயில்வே துறையில் 8 சேவைகளை ஒன்றாக இணைக்கும் வகையில், IRMS என்ற ‘இந்தியன் ரெயில்வே மேலாண்மை நிறுவனம்’என ஒரே அமைப்பாக மாற்றுவதற்கு மத்திய அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டது. இதனால் ரயில்வே துறையில் பல மாற்றங்கள் ஏற்படும், டிக்கெட் கட்டணம் உயரும், உயர்பதவிகள் பறிபோகும் என்ற சர்ச்சைகள் எழுந்தது. IRMS - Indian Railway Management Service.

இதையும் படிச்சு பாருங்க:

இந்த நிலையில், ரயில்வே வாரியத் தலைவர் வி.கே. யாதவ், நேற்று (டிச. 26) செய்தியார்களைச் சந்தித்தார். அப்போது அவர் ரயில்வே டிக்கெட் கட்டணம் உயருவது பற்றி மறைமுகமாக பேசினார். அந்த செய்தியை காண இங்கு க்ளிக் செய்யவும். தொடர்ந்து பேசிய அவர், ‘ரயில்வே துறை பணிக்கு RRB தேர்வு மூலம் ஊழியர்கள் தேர்வு செய்யப்பட்டு வந்தனர். இனி RRB தேர்வு இருக்காது. அதற்கு பதிலாக மத்திய குடிமைப்பணிகளுக்கான தேர்வாணையம் (UPSC) மூலமே ரயில்வே பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இந்த யு.பி.எஸ்.சி தேர்வு மூலம் 5 பிரவுகளில் ரயில்வே ஊழியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். அவைகளில் ஒன்று மட்டும் தொழில்நுட்பம் அல்லாத பிரவு ஆகும். மற்ற அனைத்தும் தொழில்நுட்பம் உள்ளடக்கிய பிரிவுகள் ஆகும். தற்போது ரயில்வே சேவைகளை ஒன்றாக இணைக்கும் IRMS நிறுவனம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. யு.பி.எஸ்.சி தேர்வு எழுதுபவர்கள் IRMS உட்பட எந்த நிறுவனத்தில் வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கலாம்’ இவ்வாறு ரயில்வே வாரிய தலைவர் வி.கே. யாதவ் பேசினார்.

ஏற்கனவே, ரயில்வேயில் சுமார் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழில்நுட்பம் நுட்பம் அல்லாத பணிக்கு கடந்த மார்ச் மாதம் RRB NTPC தேர்வு அறிவிக்கப்பட்டது. ஆனால், இன்று வரையில் அந்த தேர்வு பற்றிய எந்த ஒரு அடுத்தக்கட்ட அறிவிப்பும் வெளியாகவில்லை. RRB NTPC தேர்வுக்கு சுமார் 1 கோடிக்கும் அதிகமானோர் விண்ணப்பித்து காத்திருக்கின்றனர். இதனிடையே ரயில்வே வாரிய தலைவர் வி.கே யாதவ் பேசியிருப்பது, விண்ணப்பதாரர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி