ஆப்நகரம்

தென்கிழக்கு ரயில்வேயில் வேலைவாய்ப்பு!

தென்கிழக்கு ரயில்வேயில் காலியாக உள்ள டிக்கெட் கிளார்க், தட்டச்சர்,லோகோ பைலட் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கு துறை தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம், என்ன தகுதி பெற்றிருக்க வேண்டும் உள்ளிட்ட விவரங்களை இங்கு காணலாம்.

Samayam Tamil 23 Mar 2020, 7:33 pm
South Eastern Railway Recruitment 2020: தென்கிழக்கு ரயில்வே தேர்வு வாரியத்தில் இருந்து பல்வேறு பணிகளுக்கான துறை தேர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி சுமார் 500 க்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ளது. இவை அனைத்தும் துறை தேர்வுகள் மூலம் நிரப்பப்படுகிறது. அதாவது ஏற்கனவே ரயில்வேயில் எந்த பணியில் இருந்தாலும், அவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Samayam Tamil South Eastern Railway Recruitment 2020


பதவி 1: அசிஸ்டெண்ட் லோகோ பைலட்
அசிஸ்டெண்ட் லோகோ பைலட் பதவிக்கு 324 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி, ஐடிஐ, டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். கணினி வழித்தேர்வு, திறனறிவுத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்.

பதவி 2: Comml.Cum Ticket Clerk
கமெர்சியல் மற்றும் டிக்கெட் கிளார்க் பதவிக்கு 63 காலியிடங்கள் உள்ளது. இதற்கு 12 ஆம் வகுப்புமுடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பதவி 3: Jr. Clerk cum Typist
ஜூனியர் கிளார்க் மற்றும் தட்டச்சர் பதவிக்கு 68 காலியிடங்கள் உள்ளது. இதற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 12 ஆம் வகுப்பு தேர்ச்சியும், தட்டச்சு பயிற்சியும் பெற்றிருக்க வேண்டும்.

பதவி 4: Sr. Comml.Cum Ticket Clerk
சீனியர் கமெர்சியல் மற்றும் டிக்கெட் கிளார்க் பணிக்கு 84 காலியிடங்கள் நிரப்பப்படுகிறது. இந்த பணிக்கு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பதவி 3: Sr. Clerk cum Typist
சீனியர் கமெர்சியல் மற்றும் தட்டச்சர் பணிக்கு 70 காலியிடங்கள் உள்ளது. இதற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பும், ஆங்கிலம் ஹிந்தி தட்டச்சு பயிற்சியும் பெற்றிருக்க வேண்டும்.

மேற்கண்ட அனைத்து பதவிகளுகு்கும் சம்பளம் மாதம் ரூ.5,200 முதல் ரூ.20,200 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. Grade Pay எனப்படும் ஊதிய படிநிலை மட்டும் மாறுபடுகிறது.

இதே போல், ஜூனியர் இன்ஜினியர் P.way, Works, Signal, Tele ஆகிய பதவியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்கு மாதம் ரூ.9,300 முதல் ரூ.34,800 வரையில் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:
1.1.2020 தேதியின்படி விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியிருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு பிரிவினருக்கு ஏற்றவாறு மாறுபடுகிறது. அதன்படி, ஓபிசி – 45, பொது – 42, SC / ST – 47 ஆகும்.

ஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி, ரயில்வே பணியாளர்களுக்கான துறை தேர்வாகும். எனவே, மற்றவர்கள் விண்ணப்பிக்க முடியாது. ரயில்வேயில் பணியாற்றுபவர்கள் இதற்கு விண்ணப்பிக் விரும்பினால், www.rrcser.co.in என்ற இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று விண்ணப்பிக்கலாம்.

இது பற்றிய முழுமையான விவரங்களுக்கு தென்கிழக்கு ரயில்வே தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.

அடுத்த செய்தி