ஆப்நகரம்

ஊழலுக்கு பதில் என்ன? ஜெ.,வுக்கு கருணாநிதி கேள்வி

தமிழக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் செய்துள்ள ஊழலுக்கு, முதலமைச்சர் ஜெயலலிதா என்ன பதில் சொல்லப் போகிறார் என்று, திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

TNN 1 May 2016, 6:10 pm
தமிழக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் செய்துள்ள ஊழலுக்கு, முதலமைச்சர் ஜெயலலிதா என்ன பதில் சொல்லப் போகிறார் என்று, திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
Samayam Tamil karunanidhi asks jayalalithaa to answer about the corruptions
ஊழலுக்கு பதில் என்ன? ஜெ.,வுக்கு கருணாநிதி கேள்வி


இதுதொடர்பாக, கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

கரூரில் அன்புநாதன் என்பவரின் வீட்டில் இருந்து பல கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த செய்திகள் வெளிவந்து ஒரு வாரம் கடந்தும், இதுவரை மாநில அரசோ, காவல்துறையோ அல்லது தேர்தல் ஆணையம் என யாரும் முறையான விவரத்தை வெளியிடவில்லை.

மேலும், இந்த அன்புநாதன், தமிழக அமைச்சர்களின் பினாமியாகச் செயல்படுகிறார் என்றும் கூறப்படுகிறது. ஆனால், இதுபற்றி முதலமைச்சர் ஏன் ஒரு பதிலும் அளிக்கவில்லை. முதலமைச்சர் என ஒருவர் இருக்கிறாரா அல்லது இந்த விவகாரங்கள் தெரிந்தும், தெரியாததுபோல நடிக்கிறாரா என சந்தேகம் எழுகிறது.

இவ்வாறு திமுக தலைவர் கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த செய்தி