ஆப்நகரம்

ஜவடேகருக்கு ஜெயலலிதா பதில் அளிப்பாரா?: கருணாநிதி கேள்வி

மேற்குதொடர்ச்சி மலை பாதுகாப்பு தொடர்பான அறிக்கையை இன்னும் தமிழக அரசு மட்டும் சமர்ப்பிக்கவில்லை என்ற மத்திய அரசின் குற்றச்சாட்டுக்கு இப்போதாவது ஜெயலலிதா பதில் அளிப்பாரா என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

TOI Contributor 1 Apr 2016, 4:52 pm
மேற்குதொடர்ச்சி மலை பாதுகாப்பு தொடர்பான அறிக்கையை இன்னும் தமிழக அரசு மட்டும் சமர்ப்பிக்கவில்லை என்ற மத்திய அரசின் குற்றச்சாட்டுக்கு இப்போதாவது ஜெயலலிதா பதில் அளிப்பாரா என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
Samayam Tamil karunanidhi wants jayalalithaa to respond to prakash javadekars allegations
ஜவடேகருக்கு ஜெயலலிதா பதில் அளிப்பாரா?: கருணாநிதி கேள்வி


தமிழகத்தில் பாஜக தேர்தல் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான ஜவடேகர் சமீபத்தில் கூறுகையில், ''மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள உயிரினங்களை காக்கும் விதமான பாதுகாப்பு அறிக்கையை மத்திய சுற்றுப்புறத்துறை அமைச்சகத்திடம் சமர்ப்பிக்குமாறு தமிழக அரசை கேட்டு இருந்தோம். ஆனால், இன்னும் சமர்ப்பிக்கவில்லை. இந்த மலையுடன் தொடர்புடைய மற்ற 6 மாநிலங்கள் அறிக்கையை சமர்ப்பித்துவிட்டன என்று குற்றம்சாற்றி இருந்தார்.

ஜவடேகரின் இந்த குற்றச்சாட்டுக்குஜெயலலிதா பதில் அளிக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கேட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ''ஒரு மாநில முதல்வர் மீது மத்திய அமைச்சர் குற்றம்சாற்றியுள்ளார். இதற்கு கண்டிப்பாக முதல்வர் பதில் அளிக்க வேண்டும். தனது அமைச்சர்களை பதில் அளிக்குமாறு கூறாமல் இதற்கு ஜெயலலிதா பதில் அளிப்பாரா?'' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அடுத்த செய்தி