ஆப்நகரம்

நிவர் புயல் நிலவரத்தை கண்காணிக்க 15 ஆபிசர்ஸ்!

நிவர் புயல் நிலவரத்தை கண்காணிக்க சென்னையில் மண்டலவாரியாக மொத்தம் 15 ஐஏஎஸ் அதிகாரிகள தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

Samayam Tamil 24 Nov 2020, 10:59 pm
வங்க கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் மாமல்லபுரத்துக்கும், காரைக்காலும் இடையே நாளை (நவம்பர் 25) மாலை கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது.
Samayam Tamil நிவர் புயல்
நிவர் புயல் -சென்னை நிலவரம்


மேலும், புயல் கரையை கடக்கும்போது கடலோர மாவட்டங்களில் 100 -120 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நிவர் புயலை எதிர்கொள்ள அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

இதன் ஒரு பகுதியாக, சென்னையில் நிவர் புயல் நிலவரத்தை கண்காணிக்க, மாநகராட்சி எல்லைக்குட்பட்ட 15 மண்டலங்களுக்கும் தலா ஒரு ஐஏஎஸ் அதிகாரியின் தலைமையில் சிறப்பு குழுக்களை அமைத்து அரசு உத்தரவி்ட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் கருணாநிதி வீட்டில் மீண்டும் புகுந்த மழை நீர்!

முன்னதாக, புயல் அபாயம் உள்ள வட கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களுக்கு காவல் கண்காணிப்பு அதிகாரிகளை நியமித்து தமிழக டிஜிபி உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நிவர் புயல் -சென்னையில் சிறப்பு அதிகாரிகள் நியமனம்


க்ட்டுப்பாட்டு அறை:
இதனிடையே, நிவர் புயலையொட்டி, சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் நடமாடும் கட்டுப்பாட்டு அறையை உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று துவங்கி வைத்தார். 1319 என்ற எண்ணில் இந்த சிறப்பு கட்டுபாட்டு மையத்தை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி