ஆப்நகரம்

இருசக்கர வாகனம் மீது மாநகரப் பேருந்து மோதி விபத்து; 2 இளைஞர்கள் பரிதாப பலி!

மாநகரப் பேருந்து மோதிய விபத்தில், 2 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

TNN 25 Sep 2017, 1:19 pm
சென்னை: மாநகரப் பேருந்து மோதிய விபத்தில், 2 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
Samayam Tamil 2 youth dead in chennai accident
இருசக்கர வாகனம் மீது மாநகரப் பேருந்து மோதி விபத்து; 2 இளைஞர்கள் பரிதாப பலி!


சென்னை மிண்ட் பகுதியில் இருந்து வில்லிவாக்கம் நோக்கி மாநகரப் பேருந்து நேற்று இரவு சென்றது.

கொன்னூர் நெடுஞ்சாலையில் சென்ற போது, சாலையின் இடப்பக்கம் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் மீது பக்கவாட்டில் மோதியது. அதில் பேருந்தில் மோட்டார் சைக்கிள் சிக்கிக் கொண்டது.

அப்போது கீழே விழுந்த இரு இளைஞர்களும் ஹெல்மெட் அணியாததால் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அதிக அளவு ரத்தம் வெளியேறி, சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

இதுதொடர்பாக அண்ணா நகர் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அவர்கள் வில்லிவாக்கம் அறிஞர் அண்ணா நகரைச் சேர்ந்த மணிகண்டன்(20), சிட்கோ நகரைச் சேர்ந்த தமிழரசன்(19) என தெரியவந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக பேருந்து ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.

2 youth dead in Chennai Accident.

அடுத்த செய்தி