ஆப்நகரம்

சென்னையில் கொரோனாவுக்கு மேலும் ஒரு இளைஞர் பலி

சென்னையில் கொரோனா பாதிப்பு காரணமாக மேலும் ஒரு இளைஞர் உயிரிழந்துள்ளார்.

Samayam Tamil 27 May 2020, 8:15 am
சென்னையில் கொரோனா பாதிப்பு காரணமாக மேலும் ஒரு இளைஞர் உயிரிழந்துள்ளார்.
Samayam Tamil கோப்புப்படம்


இந்தியாவில் மகாராஷ்டிராவும், தமிழ்நாடும் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள மாநிலங்களாக இருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் தலைநகர் சென்னைதான் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதியாக உள்ளது.

நேற்றைய நிலவரப்படி (26.05.2020 ஆம் தேதி) தமிழ்நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 17,728 ஆக இருக்கும் நிலையில் சென்னையில் மட்டும் 11,640 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த சென்னையைச் சேர்ந்த 28 வயது இளைஞர் இன்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

இதுவரை தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்புடன் 127 பேர் உயிர்ழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி