ஆப்நகரம்

ஆட்டோவிலிருந்து கீழே விழுந்த 3 மாதக்குழந்தை உயிரிழப்பு

சென்னையில் உள்ள அயனாவரத்தில் மூன்று மாதங்களேயான கைக்குழந்தை ஆட்டோவிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Samayam Tamil 24 Feb 2019, 11:24 am
சென்னையில் உள்ள அயனாவரத்தில் மூன்று மாதங்களேயான கைக்குழந்தை ஆட்டோவிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Samayam Tamil wbz-baby-development-your-3-month-old


வில்லிவாகத்தில் ஜகன் என்ற ஆட்டோ ஓட்டுநர் வசித்தி வருகிறார். 28 வயதாகும் ஜகன், அர்ச்சனா என்ற மனைவியும், மூன்று மாதங்களேயான கைக்குழந்தையும் உள்ளது. இந்நிலையில் நேற்று ஜகன், அவரது மனைவி அர்சனா மற்றும் 3 மாதங்களேயான கைக்குழந்தையும் அட்டோவில் சென்றுள்ளனர்.

அயனாவரத்திற்கு அருகில் ஆட்டோ சென்றுக்கொண்டிருந்தபோது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபர் கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோவிற்கு முன்பு விழந்துவிட்டார். அவர் மீது ஆட்டோவை ஏற்றிவிடாமல் தடுக்க நினைத்த ஜகன் வேகமாக ஆட்டோவை திருப்பி உள்ளார். அப்போது அர்ச்சனா கையிலிருந்த மூன்று மாதக் கைகுழந்தை கிழே விழந்தது.

உடனடியாக ஆட்டோவை நிறுத்திய ஜெகன் குழந்தையை மீட்டு எழும்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபோதிலும் குழந்தை உயிரிழந்தது. இதைட்தொடர்ந்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

அடுத்த செய்தி