ஆப்நகரம்

சென்னையில் தலைதூக்கும் துப்பாக்கி கலாச்சாரம்; 4 பேர் கைது...!

கள்ளத் தனமாக துப்பாக்கி வைத்திருந்த 4 பேர், போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

TNN 9 Aug 2017, 11:52 am
சென்னை: கள்ளத் தனமாக துப்பாக்கி வைத்திருந்த 4 பேர், போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
Samayam Tamil 4 people arrested in chennai hotel for carrying illegal gun
சென்னையில் தலைதூக்கும் துப்பாக்கி கலாச்சாரம்; 4 பேர் கைது...!


சென்னை வாலாஜா சாலையில் அமைந்துள்ள தனியார் ஹோட்டலில் சிலர் துப்பாக்கியுடன் தங்கியிருப்பதாக ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வுப் பிரிவு போலீஸுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

அவர்கள் சட்டவிரோதமாக துப்பாக்கி விற்பனை செய்ய முயல்வதாகவும் கூறப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள், 4 பேரைக் கைது செய்தனர்.

அவர்கள் வியாசர்பாடி - கோபிநாத், அண்ணாநகர் - முருகன், மதுராந்தகம் - குமார் மற்றும் பிரகாஷ் என தெரியவந்தது.

அவர்களிடம் இருந்து 9mm பிஸ்டல் துப்பாக்கி, குண்டுகளுடன் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்கள் திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் அழைத்து செல்லப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

4 people arrested in Chennai hotel for carrying illegal gun.

அடுத்த செய்தி