சென்னை: தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள 5,000 நடன கலைஞர்கள் பங்கேற்கும் பிரம்மாண்ட நிகழ்ச்சி சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்று உலக சாதனை படைக்க இந்த முயற்சி மேக்ரோலல்ப்பட்டு வருகிறது. 'பரதம் 5,000' என தலைப்பிடப்பட்டுள்ள இந்நிகழ்ச்சியில் பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்த நடன கலைஞர்கள் நாட்டிய புகழ் பத்மா சுப்ரமண்யம், திரைப்பட நட்சத்திரங்கள், முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் நடனமாடவிருக்கின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த நடன மாஸ்டர் அதிர்ஷ்ட பாலனின் பயிற்சியில் சுமார் 30 நிமிடங்களுக்கு கலைஞர்கள் நடனமாடவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருக்குறளின் 3 அதிகாரத்தில் இருந்தும் 10 குறள்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு 30 குறள்கள் அடங்கிய இசைக்கு நடனமாடவிருக்கின்றனர். இந்த இசையை லக்ஷ்மன் ஸ்ருதி ஆர்கெஸ்டரா குழு வடிவமைத்துள்ளதாக அதன் நிறுவனர் வி.லக்ஷ்மன் தெரிவித்துள்ளார்.
பயிற்சி பெற்ற நடன கலைஞர்கள் மற்றும் நடனம் கற்கும் மாணவர்கள் இதில் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிர்ஷ்ட பாலன் போட்ட நடன அசைவுகள் அடங்கிய 26 நிமிட டிவிடியை வைத்து பயிற்சி எடுத்து வருவதாக பங்கேற்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிகழ்ச்சி பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் சுமார் 50,000 சதுரடி பரப்பளவு கொண்ட மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஒவ்வொரு நடன கலைஞரும் 4X4 சதுர அடியில் நடனமாட வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியை பார்க்க கின்னஸ் உலக சாதனை புத்தகம் சார்பாக சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
On April 14, Tamil New Year, 5,000 dancers from all over India and even from abroad, will gather in Chennai to attempt a feat with the hope of entering the Guinness Book Of World Records.
கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்று உலக சாதனை படைக்க இந்த முயற்சி மேக்ரோலல்ப்பட்டு வருகிறது. 'பரதம் 5,000' என தலைப்பிடப்பட்டுள்ள இந்நிகழ்ச்சியில் பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்த நடன கலைஞர்கள் நாட்டிய புகழ் பத்மா சுப்ரமண்யம், திரைப்பட நட்சத்திரங்கள், முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் நடனமாடவிருக்கின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த நடன மாஸ்டர் அதிர்ஷ்ட பாலனின் பயிற்சியில் சுமார் 30 நிமிடங்களுக்கு கலைஞர்கள் நடனமாடவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருக்குறளின் 3 அதிகாரத்தில் இருந்தும் 10 குறள்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு 30 குறள்கள் அடங்கிய இசைக்கு நடனமாடவிருக்கின்றனர். இந்த இசையை லக்ஷ்மன் ஸ்ருதி ஆர்கெஸ்டரா குழு வடிவமைத்துள்ளதாக அதன் நிறுவனர் வி.லக்ஷ்மன் தெரிவித்துள்ளார்.
பயிற்சி பெற்ற நடன கலைஞர்கள் மற்றும் நடனம் கற்கும் மாணவர்கள் இதில் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிர்ஷ்ட பாலன் போட்ட நடன அசைவுகள் அடங்கிய 26 நிமிட டிவிடியை வைத்து பயிற்சி எடுத்து வருவதாக பங்கேற்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிகழ்ச்சி பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் சுமார் 50,000 சதுரடி பரப்பளவு கொண்ட மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஒவ்வொரு நடன கலைஞரும் 4X4 சதுர அடியில் நடனமாட வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியை பார்க்க கின்னஸ் உலக சாதனை புத்தகம் சார்பாக சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
On April 14, Tamil New Year, 5,000 dancers from all over India and even from abroad, will gather in Chennai to attempt a feat with the hope of entering the Guinness Book Of World Records.