சென்னையில் கல்லூரி மாணவி ஒருவர் 7 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். புளூவேல் இணையதள விளையாட்டு, இதற்கு காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
விருகம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஜெகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் நிவேதா கடந்த திங்கள்கிழமை அன்று 7வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்
தற்கொலைக்கு முயன்ற இவர் தரையில் விழாமல் காரின் மேற்கூரையில் விழுந்துள்ளார்.
தற்போது நிவேதா, படுகாயங்களுடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவரின் நிலைமை மோசமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்திருந்த நிலையில், தற்போது இவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். புளூவேல் விளையாட்டின் தாக்கத்தால் மாணவி நிவேதா தற்கொலைக்கு முயன்றாரா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கிறதா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது என காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
a college girl in virugambakkam jumps from 7 th floor suspects to be blue whale game victim
விருகம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஜெகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் நிவேதா கடந்த திங்கள்கிழமை அன்று 7வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்
தற்கொலைக்கு முயன்ற இவர் தரையில் விழாமல் காரின் மேற்கூரையில் விழுந்துள்ளார்.
தற்போது நிவேதா, படுகாயங்களுடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவரின் நிலைமை மோசமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்திருந்த நிலையில், தற்போது இவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். புளூவேல் விளையாட்டின் தாக்கத்தால் மாணவி நிவேதா தற்கொலைக்கு முயன்றாரா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கிறதா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது என காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
a college girl in virugambakkam jumps from 7 th floor suspects to be blue whale game victim