ஆப்நகரம்

''இரு என் பொண்டாட்டி வரட்டும்''.. மனைவியை வரவழைத்து போலீசை தாக்கிய நபர்.. சென்னையில் அதிர்ச்சி

மது போதையில் இருந்த வாகன ஓட்டி மனைவியை அழைத்து வந்து போலீசாரை தாக்கிய சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Authored byதிவாகர் மேத்யூ | Samayam Tamil 18 Apr 2023, 1:41 pm
சென்னையில் மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டி வந்த நபர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு வீட்டில் இருந்த மனைவியை அழைத்து போலீசாரை தாக்கிய சம்பவம் பகீர் கிளப்பியுள்ளது.
Samayam Tamil chennai crime


சென்னையில் குடித்துவிட்டு வரும் வாகனம் ஓட்டிகளிடம் போக்குவரத்து போலீசார் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலித்து வருகின்றனர். மேலும், மது குடித்ததாக அபராதம் போடப்பட்டால் அபராதம் விதித்ததில் இருந்து 14 நாட்களுக்குள் தொகையை கட்டியாக வேண்டும். இல்லையென்றால் வாகனம் ஏலம் விடப்படும் என்றும் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கடுமையான விதிமுறைகள் இருந்தும்கூட சென்னையில் நடந்துள்ள ஒரு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சூளைமேட்டைச் சேர்ந்தவர் சத்யராஜ். இவர் நேற்றிரவு தனது நண்பருடன் குடித்துவிட்டு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை நிறுத்தி மது குடித்திருப்பதை காட்டும் ''ப்ரீத் அனலைசர்'' மிஷினை காட்டி ஊத சொல்லியுள்ளனர். ஆனால், சத்யராஜ் அதற்கு மறுப்பு தெரிவித்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது அவர் உடனிந்திருந்த நண்பரும் வாக்குவாதம் செய்துள்ளார். இந்நிலையில், போலீசார் வாகனத்தின் சாவியை எடுத்துக்கொண்டு சத்யராஜை ஊதிவிட்டு செல்லுமாறு கூறியுள்ளனர். அப்போது சத்யராஜ் வீட்டில் இருந்த தனது மாணவிக்கு போன் போட்டு சம்பவ இடத்துக்கு அழைத்துள்ளார். அங்கு வந்த சத்யராஜின் மனைவி போலீசாரை வாய்க்கு வந்தபடி திட்டியதோடு கையில் கிடைத்த பொருட்களை வைத்து தாக்கியும் உள்ளார். இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முக்கிய குறிப்பு

இருசக்கர வாகனத்தில் வாகன ஓட்டுநர் குடித்திருந்து, பின்னால் அமர்ந்திருக்கும் நபர் மது குடிக்காமல் இருந்தாலும் ஓட்டுனருக்கு அபராதம் விதிப்பது போல, பின்னால் அமர்ந்திருப்பவருக்கும் அபராதம் விதிக்கப்படும். அதேபோல், கார்களில் வாகன ஓட்டுனர் குடித்து இருந்தால் அவர்களுடன் பயணம் செய்யும் மதுகுடிக்காத அனைத்து நபர்களுக்கும் அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
எழுத்தாளர் பற்றி
திவாகர் மேத்யூ
திவாகர். நான் தொலைக்காட்சி, நியூஸ் ஆப், செய்தி இணைதளம் என ஊடக துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வருகிறேன். எழுத்தின் மீதான ஆர்வமும் ஊடகத்தின் மீது இருக்கும் பற்றால் இத்துறையை தேர்வு செய்துள்ளேன். அரசியல், குற்றம், அரசியல் - குற்றம் சார்ந்த அலசல், அரசு சார்ந்த செய்திகளை எவ்வித சமரசமும் இல்லாமல் எழுதி வருகிறேன். கடந்த 3 ஆண்டுகளாக TIMES Of INDIA சமயம் தமிழில் Senoir Digital Content Producer ஆக பணியாற்றுகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி