சென்னை அண்ணாசாலையில் உள்ள பழமைவாய்ந்த எல்ஐசி கட்டிடம் வரலாற்று புகழ் பெற்றது. இந்தியாவில் கட்டப்பட்ட முதல் வானளாவிய கட்டிடமான இது சென்னையில் அடையாளமாக திகழ்கிறது. மொத்தம் 15 மாடிகளை கொண்ட இந்த அலுவலகம் இந்திய ஆயுள் காப்பீட்டு கழகத்தின் தெற்கு தலைமையகமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று மாலை இந்த கட்டடத்தின் உச்சியில் உள்ள எல்ஐசி பெயர் பலகையில் திடீரென தீ பிடித்து எரிந்தது. இதனை கண்ட பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பதட்டமடைந்து அப்பகுதியில் குவிந்தனர். தீயை அணைக்கும் முயற்சியில் தீ அணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தீ பற்றிய காரணம் குறித்து இன்னும் தகவல் வெளியாகவில்லை. இதற்கிடையே எல்ஐசி கட்டடத்தில் தீ பற்றி எரியும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
LIC: எல்ஐசி கட்டிடத்தில் தீ விபத்து; சென்னை அண்ணா சாலையில் பரபரப்பு..!
சென்னை மவுண்ட் ரோட்டில் அமைந்துள்ள எல்ஐசி கட்டிடத்தில் தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு
Samayam Tamil 2 Apr 2023, 6:27 pm