ஆப்நகரம்

நிர்வாணப்படுத்தி ரசித்த போலீசார்?; சட்ட கல்லூரி மாணவர் குற்றச்சாட்டு!

நிர்வாணப்படுத்தி விடிய விடிய தூங்க விடாமல் போலீசார் தன்னை சித்திரவதை செய்ததாக சட்டக்கல்லூரி மாணவர் அளித்துள்ள புகார் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

Samayam Tamil 17 Jan 2022, 7:33 am
சென்னை வியாசர்பாடி புது நகர் 8வது தெருவை சேர்ந்தவர் அப்துல் ரஹீம். தரமணி சட்ட கல்லூரியில் 5ம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 13ம் தேதி நள்ளிரவு கொடுங்கையூர் எம்.ஆர்.நகர் பகுதியில் அப்துல் ரஹீம் தனது பைக்கில் வந்துள்ளார்.
Samayam Tamil பாதிக்கப்பட்ட மாணவர்
பாதிக்கப்பட்ட மாணவர்



அப்போது போலீசார் அவரை தடுத்து நிறுத்தி முகக்கவசம் அணியாமல் சென்றதாக வழக்குப்பதிவு செய்து அபராத தொகையை கட்டுமாறு கூறியுள்ளனர். அதற்கு அப்துல் ரஹீம் தான் சட்டக்கல்லூரி மாணவன் என்பதை எடுத்து கூறி போலீசாரிடம் வாக்குவாதம் செய்ததாக தெரிகிறது.

ரேஷன் கார்டுக்கு ரூ.5 ஆயிரம்; விரைவில் வருகிறது அறிவிப்பு?

இதையடுத்து காவலர் யுத்திரகுமார் என்பவரை அப்துல் ரஹீம் கன்னத்தில் அறைந்ததாக குற்றம்சாட்டப்பட்டு போலீசாரை பணி செய்யவிடாமல் தாக்கியதாக கொடுங்கையூர் போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் அப்துல் ரஹீம் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில், அப்துல் ரஹீம் கூறி இருப்பதாவது:

மாணவன் புகார் மனு


நான் சம்பவத்தன்று முகக்கவசம் அணிந்து வந்தேன். ஆனால் ஒழுங்காக அணியவில்லை என்று போலீசார் அபராத தொகை செலுத்த கூறினார்கள். அதற்கு நான் முடியாது என கூறியதால் அசிங்கமாக திட்டி வழக்கு பதிவு செய்து காவல் நிலையத்திற்கு வலுக்கட்டாயமாக அழைத்து வந்தனர்.

2 நாளில் எகிறிய கொரோனா; புதிய வேகத்தால் மக்கள் அச்சம்!

என்னை நிர்வாணமாக்கி இரவு முழுவதும் காவல் நிலையத்தில் பூட்ஸ் காலால் மார்பில் எட்டி உதைத்து போலீசார் காயப்படுத்தினர். பீரோவில் தாக்கியதில் கண்ணில் காயம் ஏற்பட்டு தையல் போடப்பட்டுள்ளது. மேலும் போலீசார் சாப்பாடு வாங்கி கொடுத்து சாப்பிட விடாமல் தாக்கினர்.

எனவே எனக்கு காயம் ஏற்படுத்திய காவல் துறை மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அப்துல் ரஹிம் புகாரில், குறிப்பிட்டு உள்ளார். இந்த சம்பவம், காவல் துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அடுத்த செய்தி