ஆப்நகரம்

பெயின்ட்டரை திருடனாக மாற்றிய கொரோனா!

குடும்ப வறுமை காரணமாக திறந்திருந்த வீட்டுக்குள் தைரியமாக புகுந்து நகைகளை கொள்ளையடித்த நபரை போலீசார் கைது செய்தனர்.

Samayam Tamil 11 Nov 2020, 3:56 pm
சென்னை பழைய மாமல்லபுரம் சாலை, காரப்பாக்கம், பாரதிதாசன் சாலையில் வசித்து வருபவர் சல்மான்(25) இவர் கடந்த 28ம் தேதி ஏசி உதிரி பாகங்கள் வாங்க பெரம்பூர் சென்றுள்ளார். அப்போது வீட்டில் அவரது தாய், தந்தை மட்டும் இருந்துள்ளனர். வெளி்யே போகும்முன் வீட்டின் பின்பக்க கதவை திறந்து வைத்துவிட்டு சென்றுள்ளார்.
Samayam Tamil பெயின்ட்டர்
சென்னை- பெயின்ட்டர்


அப்போது அந்த பகுதியை சைக்கிளில் வந்து நோட்டமிட்ட நபர், சல்மான் வீட்டு கதவு திறந்திருப்பதை கவனித்து, உடனேஉள்ளே சென்று பீரோவில் இருந்த தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளார்.

வீட்டில் பீரோ திறந்திருப்பதை பார்த்த சல்மானின் தாய், சல்மானுக்கு தகவல் கொடுக்க, வீட்டிற்கு வந்து பார்த்தபோது நகைகள் கொள்ளை போனது தெரியவந்தது.

காணாமல் போன கைக்குழந்தை...24 மணி நேரத்துக்குள் மீட்ட போலீஸ்!

இதுகுறித்து கண்ணகி நகர் காவல் நிலையத்தில் சல்மான் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கொள்ளையனை கண்டுபிடிக்க ஆய்வாளர் தலைமையில் தலைமை காவலர்கள் புஷ்பராஜ், திருமுருகன், தாமோதரன், காவலர் வினோத் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு, அந்தப் பகுதியில் பதிவான சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன.

அதில் சைக்கிளில் ஒரு நபர் வந்து செல்வது தெரியவந்தது. அதனை வைத்து சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையன் கண்ணகி நகரை சேர்ந்த பெயிண்டர் ஜெரால்டு என்பது உறுதியானது. உடனே அவரை போலீசார் கைது செய்தனர். அவனிடமிருந்து 11 சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

சிட்டியில இன்னைக்கு நைட்ல இருந்து சூடுபிடிக்கும் தீபாவளி மழை?!

விசாரணையில் கொரோனாவால் ஏற்பட்ட வேலையின்மை, அதன் விளைவாக ஏற்பட்ட வறுமை, தனது மூன்று குழந்தைகளுக்கு உணவளிக்க வேண்டிய கட்டாயம் ஆகியவற்றின் காரணமாக திருடும் நிலைக்கு தள்ளப்பட்டதாகவும், திருடிய நகைகளை விற்க மனமில்லாமல் வீட்டிலேயே பெட்டியில் போட்டு பூட்டு வைத்திருந்ததாகவும் வாக்குமூலம் ஜெரால்டு வாக்குமூலம் அளித்துள்ளார்.

அடுத்த செய்தி