ஆப்நகரம்

ஜெயலலிதாவின் புதிய சிலை தயார்; அதிமுக தலைமையகத்தில் நாளை திறப்பு!

சென்னை: அதிமுக தலைமையகத்தில் ஜெயலலிதாவின் புதிய சிலை நாளை திறக்கப்பட உள்ளது.

Samayam Tamil 13 Nov 2018, 9:43 pm
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 7 அடி உயர வெண்கல சிலை அதிமுக தலைமை அலுவலகத்தில் திறக்கப்பட்டது. இதனை முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் திறந்து வைத்தனர்.
Samayam Tamil Jaya


அப்போது சிலையை வடிவமைத்த சிற்பி பிரசாத் என்பவருக்கு முதலமைச்சர் தங்க மோதிரம் ஒன்றை பரிசளித்தார். ஆனால் ஜெயலலிதாவின் சிலை பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளானது.

அக்கட்சி தொண்டர்களே சிலையைப் பார்த்து, யார் இது என்று கேட்கும் அளவிற்கு முகம் மாறுதல் அடைந்து காணப்பட்டது. சிலர் வளர்மதி போன்று இருப்பதாகவும், முதலமைச்சர் பழனிசாமியின் மனைவி போன்று இருப்பதாகவும் கேலி செய்தனர்.

இதையடுத்து ஜெயலலிதாவின் புதிய சிலை உருவாக்கப்பட்டு வந்தது. இந்த சிலை முழு வடிவம் பெற்று, சென்னை கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் ராயப்பேட்டை அதிமுக தலைமையகத்தில் ஜெயலலிதாவின் புதிய சிலை நாளை திறக்கப்பட உள்ளது.

காலை 9.15 மணிக்கு முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சிலை திறந்து வைக்க உள்ளனர்.

அடுத்த செய்தி