ஆப்நகரம்

பிரியாணி கடை மீது பெட்ரோல் குண்டு; அதுவும் விக்கிற விலையில!

சென்னை பூந்தமல்லி அருகே பிரியாணி கடை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Samayam Tamil 20 Apr 2021, 10:29 am
திருவள்ளூர் மாவட்டம் திருமழிசையில் பிரியாணி கடை வைத்து நடத்தி வருபவர் அருணாச்சலம் (40). நேற்று இவரது கடைக்கு இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் பிரியாணி கேட்டுள்ளனர். இவர்கள் பலமுறை பிரியாணி சாப்பிட்டுவிட்டு பணம் தராமல் செல்வது வழக்கம் என கூறப்படுகிறது.
Samayam Tamil பெட்ரோல் குண்டு வீசப்பட்ட பிரியாணி கடை
பூந்தமல்லி அருகே திருமழிசையில் பிரியாணி கடை மீது பெட்ரோல் குண்டு வீச்சு


இந்நிலையில் நேற்று கடை உரிமையாளர் அருணாச்சலம் இருவருக்கும் பிரியாணி தர மறுத்துள்ளார். உடனே அவர்கள் கடையின் உரிமையாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சென்றுள்ளனர்.

ஜெயில்ல போடுங்க...விவசாயிகள் தர்ணா!

சிறிது நேரத்தில் எபிநேசர் உள்ளிட்ட 3 பேர்‌ அங்கு வந்துள்ளனர். பின்னர் யாரும் எதிர்பாராத வகையில் மறைத்து வைத்திருந்த 2 பெட்ரோல் குண்டுகளை பிரியாணி கடை மீது வீசியுள்ளனர்.

இதில் ஒரு குண்டு பிரியாணி கடை மீதும், மற்றொரு குண்டு அருகே இருந்த வீட்டின் மீதும் விழுந்தது. இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

வீட்டை தரைமட்டமாக்கிய கும்பல்; விவசாயி கண்ணீர்!

இதுகுறித்து வெள்ளவேடு காவல் நிலையத்தில் அருணாசலம் புகார் அளித்தார். புகாரின்பேரில் திருமழிசை உடையார்கோவில் பகுதியை சேர்ந்த எபிநேசன்‌ மற்றும் அவரது நண்பர்கள் உள்ளிட்ட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தற்போது 3 பேரும் தலைமறைவாகியுள்ள நிலையில் தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். எபிநேசன் மீது ஏற்கனவே இரண்டு கொலை வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி