ஆப்நகரம்

சாலை விபத்து... காருக்குள் சிக்கி தவித்த நபர்!

லாரி மோதி கார் தலைகீழாக கவிழ்ந்த விபத்தில் காருக்குள் சிக்கிய நபரால், சென்னை ஜிஎஸ்டி சாலை பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Samayam Tamil 3 Dec 2020, 6:35 pm
சென்னையை அடுத்த தாம்பரம் ஜி.எஸ்.டி. சாலை, சானடோரியம் அருகே டாரஸ் லாரியின் டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்து அருகில் பயணித்து கொண்டிருந்த காரின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
Samayam Tamil கார் விபத்து
கார் விபத்து -ஜிஎஸ்டி சாலை


இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நசுங்கியது. இதில் காரில் சிக்கியுள்ள நபரை மீட்க தாம்பரம் தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் பொதுமக்கள் கடுமையாக முயற்சித்து வருகின்றனர்.

கார் நொறுங்கியுள்ளதால் அதனை உடைத்து அதனுள் இருந்த நபரை மீட்க கடுமையான போராட்டம் நடைபெற்றது. இந்த விபத்தினால் தாம்பரம் அருகே ஜிஎஸ்டி சாலையில் சில மணி நேரம் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

நடுரோட்டில் பற்றி எரிந்த கார்... நள்ளிரவில் பரபரப்பு!

இந்த விபத்தில் சாலையின் மீடியன் சுவர் உடைந்தும், விளக்கு கம்பம் ஒன்றும் சாய்ந்தது.

அடுத்த செய்தி