ஆப்நகரம்

தவறை தவிர்த்திருக்கலாம்: ரஜினிகாந்த் கற்ற பாடம்!

ரஜினிகாந்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்த நிலையில் தவறை தவிர்த்திருக்கலாம் என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Samayam Tamil 15 Oct 2020, 11:21 am
நடிகர் ரஜினிகாந்தின் ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு கடந்த மார்ச் மாதம் முதல், அக்டோபர் வரையிலான சொத்து வரி செலுத்தாமல் நிலுவையில் இருந்துள்ளது. இது தொடர்பாக மாநகராட்சி தரப்பில் ராகவேந்திரா மண்டபத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நோட்டீஸை எதிர்த்து நடிகர் ரஜினிகாந்த் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
Samayam Tamil rajinikanth


அந்த மனுவில், மார்ச் 24ஆம் தேதி முதல் மண்டபத்தில் எந்த நிகழ்ச்சிகளும் நடைபெறாததால் எந்த வருமானமும் இல்லை எனவே சொத்து வரி கேட்டு நிர்பந்திக்ககூடாது என்று கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் ரஜினிகாந்துக்கு எச்சரிக்கை விடுத்தது. அத்துடன், இதற்கு மேலும், இப்படி நடந்தால் அபராதம் விதிக்க நேரிடும் என்றும் நீதிபதி அனிதா அதிரடியாக எச்சரித்தார். இதனையடுத்து மனுவை ரஜினிகாந்த் தரப்பு வாபஸ் பெற்றது.

பள்ளிகள் திறப்பு: தமிழக அரசின் முடிவு இதுதான்!

இன்று இரவு (அக்டோபர் 15) 12 மணிக்குள் ரூ. 6.5 லட்சம் வரியை ரஜினி கட்ட தவறினால் அவருக்கு 2 சதவீதம் அபராதம் விதிக்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சி அதிகாரி தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.



நீதிமன்றத்தின் எச்சரிக்கைக்கு ஆளான ரஜினிகாந்த் இது குறித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். “ராகவேந்திரா மண்டப சொத்து வரி... நாம் மாநகராட்சியில் மேல்முறையீடு செய்திருக்க வேண்டும். தவறைத் தவிர்த்திருக்கலாம். அனுபவமே பாடம்” என்று பதிவிட்டுள்ளார்.

அடுத்த செய்தி