ஆப்நகரம்

ரேசனில் பருப்பு வகைகள் , பாமாயில் விநியோகம் நிறுத்தம்

ரேசன் கடைகளில் மலிவு விலையில் வழங்கப்பட்ட உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு மற்றும் பாமாயில் ஆகியவற்றின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

TNN 25 Feb 2017, 5:24 pm
சென்னை : ரேசன் கடைகளில் மலிவு விலையில் வழங்கப்பட்ட உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு மற்றும் பாமாயில் ஆகியவற்றின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.
Samayam Tamil affordable price dal and palm oil stop in ration
ரேசனில் பருப்பு வகைகள் , பாமாயில் விநியோகம் நிறுத்தம்


உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு மற்றும் பாமாயில் ஆகியவற்றின் விலை வெளி சந்தையில் அதிகமாக இருப்பதால் ஏழை மக்களின் நலன் காக்க மாநில அரசு ரேசன் கடைகளில் 1 கிலோ உளுத்தம் பருப்பு ரூ. 30-க்கும் , 1 கிலோ துவரம் பருப்பு ரூ.30-க்கும் மற்றும் 1 லிட்டர் பாமாயில் ரூ.25-க்கும் மலிவு விலையில் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.

இந்தநிலையில் மலிவு விலையில் வழங்கப்பட்ட இந்த பருப்பு வகைக்கள் மற்றும் பாமாயிலின் விநியோகம் படிப்படியாக குறைக்கப்பட்டு தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாக பொது மக்கள் புகார் அளித்து வருகின்றனர்.

தற்பொழுது சென்னை மாவட்டத்தில் உள்ள கடைகளில் இந்த வகைக்கள் மற்றும் பாமாயிலின் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இதே போல சர்கரை , அரிசியின் விநியோகமும் படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
Affordable price Dal and palm oil stop in ration

அடுத்த செய்தி