ஆப்நகரம்

பெங்களூரு சிறையில் இருக்கும் சுதாகரனுக்கு மீண்டும் பிடி வாரண்ட் - அந்நிய செலாவணி மோசடி வழக்கில் அடுத்த ஆப்பு

அந்நிய செலாவணி மோசடி வழக்கில், பெங்களூரு பார்ப்பன அக்ரஹார சிறையில் உள்ள சுதாகரனை அடுத்த மாதம் 7ஆம் தேதி சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

TNN 10 May 2017, 1:48 pm
அந்நிய செலாவணி மோசடி வழக்கில், பெங்களூரு பார்ப்பன அக்ரஹார சிறையில் உள்ள சுதாகரனை அடுத்த மாதம் 7ஆம் தேதி சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
Samayam Tamil again arrest warrant issued to sudhakaran
பெங்களூரு சிறையில் இருக்கும் சுதாகரனுக்கு மீண்டும் பிடி வாரண்ட் - அந்நிய செலாவணி மோசடி வழக்கில் அடுத்த ஆப்பு


அதிமுக கட்சியின் தொலைக்காட்சி நிறுவனத்திற்காக வெளிநாடுகளில் இருந்து ஒளிபரப்பு சாதனங்கள் வாங்கியது தொடர்பாக, பல்வேறு வெளிநாட்டு வங்கி கணக்குகளில் முறைகேடாக பணப்பறிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பான வழக்கில், தொலைக்காட்சி நிறுவனத்தை நிர்வகித்து வந்த சசிகலா, டிடிவி தினகரன், சுதாகரன் ஆகியோர் மீது சென்னை பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சுதாகரன் தொடர்ந்து ஆஜராகவில்லை.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசரணைக்கு வந்தது. சொத்துக் குவிப்பு வழக்கில் ஏற்கெனவே பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சுதாகரன் இன்றும் ஆஜராகவில்லை. இதைத்தொடர்ந்து, சுதாகரனுக்கு எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. மேலும், அடுத்த மாதம் 7ம் தேதி சுதாகரனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படி அமலாக்கதுறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அடுத்த செய்தி