ஆப்நகரம்

ஜெயலலிதாவுடன் தவ வாழ்க்கை வாழ்ந்தவர் சசிகலா... இபிஎஸ் ஆதரவு முன்னாள் அமைச்சர் புகழாரம்!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுடன் இணைந்து தவ வாழ்க்கை வாழ்ந்தவர் சசிகலா என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுல இந்தியா புகழாரம் சூட்டியுள்ளார்.

Samayam Tamil 13 Jan 2021, 12:37 pm
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சசிகலாவை தவறாக பேசியதாக கூறி, அவரை கண்டித்து அதிமுக சார்பில் சென்னையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Samayam Tamil கோப்பு படம்

அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா சசிகலாவுக்கு புகழாரம்


இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக முன்னாள் அமைச்சரான கோகுல இந்திரா பின்னர் செய்தியாளர்களிடம் கூறும்போது, "மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுடன் இணைந்து தவ வாழ்க்கை வாழ்ந்தவர் சசிகலா.

அதிமுகவின் தலைவராக இருந்த அவர், எங்கிருந்தாலும் நாங்கள் மரியாதையுடன் போற்றக்கூடியவர். அவரை யார் எங்கிருந்து அவமரியாதையாக பேசினாலும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது" என்று கோகுல இந்திரா சென்டிமென்ட்டாக பேசியுள்ளார்.

சென்னை டூ திருப்பதி... ஏழுமலையான் பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்!

ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுகவில் உட்கட்சி பூசல் வெடித்தபோது, சசிகலாவின் அணியிலிருந்து வெளியேறி இபிஎஸ் அணிக்கு ஆதரவாக செயல்பட்டவர்களில் கோகுல இந்திராவும் ஒருவர்..

ஆனால் தற்போது அவர் சசிகலாவை புகழ்ந்து பேசியுள்ளது அதிமுகவினரை மட்டுமின்றி பிற கட்சியினரையும் வியப்படைய செய்துள்ளது.

அடுத்த செய்தி