ஆப்நகரம்

வண்டலூர் பூங்கா: தாய் புலியே குட்டிப்புலிகளைக் கொன்ற சோகம்!

வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிறந்த 4 புலிக்குட்டிகள் அனைத்தும் பரிதாபமாக உயிரிழந்துள்ளன

TNN 10 Nov 2017, 3:45 pm
வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிறந்த 4 புலிக்குட்டிகள் அனைத்தும் பரிதாபமாக உயிரிழந்துள்ளன.
Samayam Tamil all four newborn tiger cubs in vandalur zoo die after suffering deep injuries
வண்டலூர் பூங்கா: தாய் புலியே குட்டிப்புலிகளைக் கொன்ற சோகம்!


சென்னை வண்டலூர் பூங்காவில் உள்ள உத்ரா என்ற பெண்புலிக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை 4 புலிக்குட்டிகள் பிறந்தன. அவை அனைத்தும் அடுத்த நாளே வயிற்றில் மோசமான காயங்களுடன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து தெரிவித்த பூங்கா நிர்வாகம், குட்டிகளை தாய்ப்புலி பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்வதற்காக அவற்றை வாயில் கடித்து எடுத்துச் செல்லும்போது இவ்வாறு நடந்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.

மேலும், தாய்புலி யாரையும் அருகில் நெருங்க விடாததால் அந்தக் குட்டிகளை காப்பாற்ற முடியாமல் போனதாக தெரிவித்துள்ளனர். அடுத்த முறை இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

All four newborn tiger cubs in Vandalur zoo die after suffering deep injuries.

அடுத்த செய்தி