ஆப்நகரம்

சென்னையில் அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை காரணமாக அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 5 Oct 2018, 7:09 am
சென்னையில் கனமழை காரணமாக அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil rain


தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கன முதல் மிக கனமழை பெய்யும் என்றும், வருகிற 7ஆம் தேதி அன்று மிக அதிக கனமழை பெய்யும் என்றும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி பல மாவட்டங்களில் இரண்டு நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்றும் இன்றும் மழை கொட்டித் தீர்த்துள்ளது. தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியது.

இந்நிலையில், சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக அனைத்து பள்ளிகளுக்கும் இன்று (வெள்ளிக்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் நெல்லை ஆகிய மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.

அடுத்த செய்தி