மிலாடிநபி தினத்தை முன்னிட்டு வரும் 30ஆம் தேதி சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள் மற்றும் மது கூடங்களையும் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
அரசு வாணிபக் கழகத்தின் டாஸ்மாக் கடைகள் மட்டுமல்ல, தனியார் மதுக்கூடங்கள் உட்பட வேறெங்கும் விற்கக்கூடாது என்று இந்த உத்தரவு அதிரடியாக அறிவித்துள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாவது, “மாவட்டத்தில் உள்ள அனைத்து தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மதுபான கடைகள், அனைத்து பொழுதுபோக்கு மையங்கள் மற்றும் மனமகிழ் மன்றம் போன்ற கிளப்புகளில் செயல்படும் மதுக்கூடங்கள், நட்சத்திர ஹோட்டல்களில் செயல்படும் மதுக்கூடங்கள், தமிழ்நாடு ஹோட்டலில் செயல்படும் மதுக்கூடங்கள் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட அயல்நாட்டு மதுபான வகைகள் விற்பனை செய்யும் கடைகள் ஆகியவை மிலாடிநபி தினத்தை முன்னிட்டு வரும் 30ம் தேதி விடுமுறை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.”
உத்தரவை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கோவை மாவட்டத்திலும் இதே அறிவிப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அரசு வாணிபக் கழகத்தின் டாஸ்மாக் கடைகள் மட்டுமல்ல, தனியார் மதுக்கூடங்கள் உட்பட வேறெங்கும் விற்கக்கூடாது என்று இந்த உத்தரவு அதிரடியாக அறிவித்துள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாவது, “மாவட்டத்தில் உள்ள அனைத்து தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மதுபான கடைகள், அனைத்து பொழுதுபோக்கு மையங்கள் மற்றும் மனமகிழ் மன்றம் போன்ற கிளப்புகளில் செயல்படும் மதுக்கூடங்கள், நட்சத்திர ஹோட்டல்களில் செயல்படும் மதுக்கூடங்கள், தமிழ்நாடு ஹோட்டலில் செயல்படும் மதுக்கூடங்கள் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட அயல்நாட்டு மதுபான வகைகள் விற்பனை செய்யும் கடைகள் ஆகியவை மிலாடிநபி தினத்தை முன்னிட்டு வரும் 30ம் தேதி விடுமுறை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.”
உத்தரவை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கோவை மாவட்டத்திலும் இதே அறிவிப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.