ஆப்நகரம்

ஒரே வாரத்தில் ரெண்டு முறை ரெய்டு...என்ன நடக்கிறது நீலாங்கரையில்?

நீலாங்கரை சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் மேற்கொண்ட சோதனையில் கணக்கில் வராத 2.12 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

Samayam Tamil 24 Nov 2020, 8:47 am
சென்னை, கிழக்கு கடற்கரை சாலை, நீலாங்கரை சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சம் வாங்குவதாக கிடைத்த ரகசிய தகவல் கிடைத்தது.
Samayam Tamil கோப்பு படம்
நீலாங்கரை சார் பதிவாளர் அலுவலகம்


அதன் பேரில் காஞ்சிபுரம் டி.எஸ்.பி கலைச் செழியன், சென்னை டி.எஸ்.பி வெற்றிச் செல்வம், ஆகியோர் தலைமையில் 10க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர் அங்கு அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

சில மணி நேரம் நீடித்த இந்த சோதனையில் கணக்கில் வராத சுமார் 2,12,000 ரூபாய் பணத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

சுபஸ்ரீ இறந்தும் புத்தி வரல... சாலைகளில் மீண்டும் முளைக்கும் பேனர்கள்... கண்டுக்காத போலீஸ்!

கடந்த மாதம் 16 ஆம் தேதி, இங்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது கணக்கில் வராத 2,32,935 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி