ஆப்நகரம்

ப.சிதம்பரம் வீட்டில் நகை, பணம் அபேஸ்

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் சென்னை இல்லத்தில் பல கோடி ரூபாய் மதிக்கத்தக்க நகை, பணம் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

Samayam Tamil 8 Jul 2018, 1:21 pm
முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் சென்னை இல்லத்தில் பல கோடி ரூபாய் மதிக்கத்தக்க நகை, பணம் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
Samayam Tamil pc345-1505466798


முன்னாள் மத்திய நிதி அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான ப.சிதம்பரத்தின் வீடு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ளது.

ஊட்டி சென்றிருந்த அவரது மனைவியும் வழக்கறிஞருமான நளினி சிதம்பரம் இன்று காலை 7.30 மணிக்கு வீடு திரும்பியபோது வீட்டில் கொள்ளை நடந்திருப்பது தெரியவந்துள்ளது. ரூ.1.50 லட்சம் பணம் மற்றும் பல கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் ஆகியவை திருடு போயிருக்கின்றன.

கொள்ளை போன நகை, பணம் ஆகியவை இருந்த அலமாரி திறந்து கிடைத்திருக்கிறது. இதில் அந்த வீட்டில் வேலை பார்த்த இருவருக்கு தொடர்பிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

வீட்டில் இருந்த சிசிடிவி காட்சிகளைப் பார்வையிட்டபோது இரு பெண்கள் முகமூடி அணிந்து வீட்டிற்குள் நுழைவது தெரிந்துள்ளது. சிதம்பரம் வீட்டில் வேலை பார்ப்பவர்கள் தலைமறைவாகிவிட்டதால் அவர்கள்தான் இத்திருட்டை நடத்தியிருக்க வேண்டும் என்று வலுவான சந்தேகம் எழுந்துள்ளது.

இது குறித்து ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் நளினி சிதம்பரத்தின் மேனேஜர் முரளி புகார் அளித்துள்ளார். இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். கைரேகை தடயங்களைச் சேகரித்து, மோப்பநாய் உதவியுடன் சிதம்பரத்தின் வீட்டில் விசாரணை நடக்கிறது.

அடுத்த செய்தி