ஆப்நகரம்

Covid Vaccine:தைரியமாக தடுப்பூசி போட்டு கொண்ட அப்பல்லோ மருத்துவமனை தலைவர்!

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில், இந்த குழுமத்தின் தலைவரான டாக்டர் பிரதாப் சி. ரெட்டி இன்று கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டார்.

Samayam Tamil 16 Jan 2021, 1:04 pm
தமிழகத்தில் மொத்தம் 166 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் இன்று காலை தொடங்கியுள்ளது. இவற்றில் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, அப்பல்லோ மருத்துவமனை உள்பட சென்னையில் மொத்தம் 12 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
Samayam Tamil கொரோனா தடுப்பூசி பணிகள் -சென்னை அப்பல்லோ மருத்துவமனை
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அதன் குழுத் தலைவர் பிரதாப் சி. ரெடடி கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டார்


சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசி போடும் மையத்தில் அப்பல்லோ குழுமத்தின் தலைவரான டாக்டர் பிரதாப் சி ரெட்டி, இன்று கொரோனா தடுப்பூசி மருந்தை போட்டு கொண்டார்.

கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொள்வது தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் சற்று அச்சம் நிலவிவரும் நிலையில், அவர்களின் அச்சத்தை போக்கும் விதத்தில் 87 வயதான பிரதாப் ரெட்டி தைரியமாக தடுப்பூசி போட்டு கொண்டு தமது கட்டை விரலை உயர்த்தி தம்ஸ் அப் காட்டியது அனைவரையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Corona Vaccine: கொரோனா தடுப்பூசி... என்ன செய்யலாம், என்னவெல்லாம் செய்யக்கூடாது?

சென்னை அப்பல்லோ மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மையத்தில் ஒரு நாளைக்கு 100 பேர் வீதம் தடுப்பூசி போடப்பட உள்ளது.

அடுத்த செய்தி