ஆப்நகரம்

ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம்; கலை நிகழ்ச்சிகளுடன் களைகட்டிய கோயம்பேடு!

சென்னை: கோயம்பேடு பேருந்து நிலையத்தில் விழிப்புணர்விற்காக கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Samayam Tamil 31 Oct 2018, 2:26 pm
ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் கடந்த 29ஆம் தேதி தொடங்கி வரும் நவம்பர் 3ஆம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி அரசு மற்றும் பொதுத்துறை அலுவலகங்களில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
Samayam Tamil Koyembedu1


அதில், பொது வாழ்க்கையில் நேர்மையை ஊக்குவிப்பது, லஞ்சம் கொடுக்கவோ, வாங்கவோ கூடாது. எல்லா ஊழியர்களும் ஒழுக்க நெறிமுறை கோட்பாடுகளை ஏற்றுக் கொள்ளுதல் உள்ளிட்ட உறுதிமொழிகள் எடுத்துக் கொள்ளப்பட்டன.

இந்நிலையில் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மத்திய ஊழல் தடுப்பு ஆணையம் மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சார்பில் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதில், புலிவேஷம் இட்டு பாடல் பாடி நடனம் ஆடினர். அவர்களுக்கு பக்க வாத்தியங்களும் இசைக்கப்பட்டன. அப்போது பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டன. இதனை ஏராளமான பொதுமக்கள் கண்டு களித்தனர்.

அடுத்த செய்தி