ஆப்நகரம்

ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் அப்பல்லோவில் இன்று ஆய்வு..!!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுக சாமி விசாரணை ஆணையம் இன்று அப்பல்லோ மருத்துவமனையில் ஆய்வு மேற்கொள்கிறது.

Samayam Tamil 29 Jul 2018, 6:57 am
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுக சாமி விசாரணை ஆணையம் இன்று அப்பல்லோ மருத்துவமனையில் ஆய்வு மேற்கொள்கிறது.
Samayam Tamil 93350557-JayalalithaaPTI_6
ஜெயலலிதா மரணம்: அப்பல்லோவில் ஆணையம் இன்று ஆய்வு


ஜெயலலிதா மர்ம மரணம் தொடர்பாக, ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணயம் இதுவரை சுமார் 65-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தியுள்ளது.

இதில் அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஆகியோரும் அடக்கம். இதன் காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் ஆய்வு செய்ய வேண்டிய சூழல் ஆணையத்திற்கு ஏற்பட்டுள்ளது.

அதன்படி ஆணையத்தை சேர்ந்த வழக்கறிஞர்கள் மதுரை எஸ். பார்த்தசாரதி மற்றும் நிரஞ்சன் ஆகியோர் இன்று சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் ஆய்வு மேற்கொள்கின்றனர்.

இன்று இரவு 7 மணி முதல் 7.45 மணி வரை ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்ட அறை சசிகலா, அமைச்சர்கள், மருத்துவர்கள் தங்கியிருந்த அறைகள் உள்ளிட்ட பல இடங்களில் சுமார் 45 நிமிடங்கள் வரை ஆய்வு செய்யப்படுகின்றன.

இதில் ஜெயலலிதாவிற்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்ட பிரிவு, தீவிர இதய நோய் சிகிச்சை பிரிவு, அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட போது இருந்த அறை, எக்மோ கருவி பொருத்தப்பட்ட அறை, அப்போதைய பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் வந்து ஜெயலலிதாவை பார்த்ததாக சொல்லப்படும் அறை,

மருத்துவமனையின் இரண்டாம் தளம், ஜெயலலிதாவிற்கு ஸ்கேன் எடுக்கப்பட்ட அறை, அதற்கு செல்லக்கூடிய பாதை ஆகியவற்றுடன் ஜெயலலிதாவின் உடல் எம்பாமிங் செய்யப்பட்ட அறை, அவருக்கு உணவு சமைத்து கொடுக்கப்பட்ட அறை ஆகியவையும் ஆய்வு உட்படுத்தப்பட உள்ளன.

ஆறுமுக சாமி ஆணைய வழக்கறிஞர்கள் அப்பல்லோ மருத்துவமனையில் ஆய்வில் ஈடுபடும் போது, சசிகலா தரப்பிலிருந்து வழக்கறிஞர்கள் இரண்டு பேர் உடனிருப்பார்கள். ஆய்வு முடிந்த பிறகு இரவு 7.45 முதல் 8.15 வரை ஜெ. தீபா மற்றும் அவரது வழக்கறிஞர்கள் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அறையை பார்வையிட அனுமதிக்கப்படவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி