ஆப்நகரம்

சென்னையில் அசோக் லேலேண்ட் நிறுவனத்தின் எலக்ட்ரிக் பஸ் சோதனை ஓட்டம்!

அசோக் லேலேண்ட் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட புதிய எலக்ட்ரிக் பஸ்ஸின் சோதனை ஓட்டம் சென்னை மாநகர பேருந்து கழகத்தினால் வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது.

TNN 12 Jun 2017, 7:05 pm
சென்னை : அசோக் லேலேண்ட் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட புதிய எலக்ட்ரிக் பஸ்ஸின் சோதனை ஓட்டம் சென்னை மாநகர பேருந்து கழகத்தினால் வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது.
Samayam Tamil ashok leylands electric bus circuit test driven for mtc in chennai
சென்னையில் அசோக் லேலேண்ட் நிறுவனத்தின் எலக்ட்ரிக் பஸ் சோதனை ஓட்டம்!


பல்லவன் சாலையில் அமைந்துள்ள மத்திய பணிமனைக்கு எலக்ட்ரிக் பஸ் கொண்டுவரப்பட்டது. தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் மற்றும் போக்குவரத்து செயலாளர் தவிதார் முதலில் பேருந்தை பார்வையிட்டனர். பின்னர் இருவரும் பேருந்தில் பயணம் மேற்கொண்டனர். சர்க்கியூட் என அழைக்கப்படும் இந்த பேருந்தினால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படாது. மேலும் இதில் ரீசார்ஜபிள் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. சர்க்கியூட் பேருந்து பல்லவன் சாலையில் இருந்து கலங்கரை விளக்கம் வரை இயக்கப்பட்டது.

இந்த பேருந்தில் 35 முதல் 65 இருக்கைகள் வரை பொருத்தலாம். மேலும் ஒரு முறை சார்ஜ் செய்தால் 120 கிமீ தூரம் பயணிக்க முடியும். இன்று நடத்தப்பட்ட சோதனை ஓட்டத்தில் 80 கிமீ வேகத்தில் பேருந்து பயணித்தாகவும், மிகவும் மென்மையாக பயணம் அமைந்தாகவும் போக்குவரத்து கழகத்தை சேர்ந்த அதிகாரி கூறியுள்ளார்.

பேட்டரி மற்றும் இருக்கை எண்ணிக்கைக்கு ஏற்ப பேருந்தின் விலை 1.50 கோடி ரூபாயில் இருந்து, 3.50 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பேருந்தில் பொருத்தப்பட்டுள்ள பேட்டரி அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. பேருந்து விலையில் 60 சதவீதம் பேட்டரியின் விலை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த அக்டோபர் மாதம் தயாரிக்கப்பட்ட இந்த பேருந்து 6 மாதங்களாக சோதனை ஓட்டத்தில் இருந்ததாகவும் போக்குவரத்து அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அடுத்த செய்தி