ஆப்நகரம்

ஆக்சிஜனுடன் இலவச ஆட்டோ ஆம்புலன்ஸ்: நடத்துறது யாருன்னு பாத்தா அசந்துருவீங்க!

சென்னையை சேர்ந்த பட்டதாரி இளைஞர்கள் இணைந்து கொரோனா நோயாளிகளுக்கு உதவிடும் வகையில் ஆக்சிஜன் சிலிண்டர் பொருத்தப்பட்ட ஆட்டோ ஆம்புலன்ஸ் அறிமுகப்படுத்தி, வெற்றிகரமாக செயல்படுத்தியும் வருகின்றனர். இது, பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Samayam Tamil 10 May 2021, 3:33 pm
தமிழகம் முழுவதும் கொரோனா நோய் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதன் வேகம் சென்னையில் விஸ்வரூபம் எடுத்துள்ளதால், கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
Samayam Tamil இலவச ஆட்டோ ஆம்புலன்ஸ்
இலவச ஆட்டோ ஆம்புலன்ஸ்


ஒருபுறம் ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு, மறுபுறம் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு, மற்றொரு புறம் ஆம்புலன்ஸ், படுக்கைகளுக்கு தட்டுப்பாடு என ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருவதால் மக்கள் மிகுந்த அச்சத்துக்கு ஆளாகி வருகின்றனர்.

இதனை கருத்தில் கொண்டு கொரோனா நோயாளிகளுக்கு உதவிடும் வகையில் வடசென்னையை சேர்ந்த பட்டதாரி இளைஞர்கள் ஒன்று சேர்ந்து கொரோனா நோயாளிகளுக்காக ஆக்சிஜன் சிலிண்டர் பொருத்தப்பட்ட ஆட்டோ ஆம்புலன்சை அறிமுகப்படுத்தி வெற்றிகரமாக செயல்படுத்தியும் வருகின்றனர்.

புறநகர் ரயில் சேவையில் மாற்றம்; அனுமதிக்கப்பட்டவர்களின் விபரம்!

ஆட்டோ ஆம்புலன்ஸ்கள் மூச்சுத் திணறலால் பாதிக்கப்படும் நோயாளிகளை உடனுக்குடன் ஆக்சிஜன் உதவியுடன் மருத்துவமனைகளுக்கு இலவசமாக அழைத்து சென்று சேர்த்து வருகின்றனர்.

இ-சேவை மையம் இயங்குமா?; அரசு கேபிள் டிவி தகவல்!

இதுகுறித்து வடசென்னையை சேர்ந்த இளைஞர்கள் கூறியதாவது: வடசென்னை மக்களின் பயன்பாட்டிற்காக இந்த ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவையை உருவாக்கி உள்ளோம். கடந்த 2 வாரங்களாக ஆட்டோ ஆம்புலன்ஸ் செயல்பட்டு வருகிறது.

இது, எந்த நேரமும் செயல்படும் வகையில், இரண்டு ஆக்சிஜன் ஆட்டோ பொதுமக்கள் பயன்பாட்டிற்கு உள்ளது. தினமும், 150 முதல் 200 அழைப்புகள் வருகின்றன. இதன் மூலம் 20 முதல் 30 பேர் வரை மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறோம்.

கொரோனா நோயாளியை மருத்துவமனையில் சேர்த்த பிறகு கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்கிறோம். அதனால் யாரும் பயப்பட வேண்டியதில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

அடுத்த செய்தி