ஆப்நகரம்

துப்பட்டாவில் தங்கம் கடத்திய பெண் கைது

துப்பட்டாவில் மறைத்து 13 கிலோ தங்கத்தைக் கடத்தி வந்த பெண் கைது செய்யப்பட்டார்.

Samayam Tamil 10 Jun 2018, 9:41 am
துப்பட்டாவில் மறைத்து 13 கிலோ தங்கத்தைக் கடத்தி வந்த பெண் கைது செய்யப்பட்டார்.
Samayam Tamil long-rope-chain-18k-yellow-gold-filled-twisted


துபாயில் இருந்து சென்னை வந்த ஏர் இந்தியா விமான பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது சந்தேகத்திற்குரிய பெண்ணிடம் விசாரணை நடத்திடனர்.

பெண் அதிகாரி மூலம் அந்தப் பெண்ணிடம் சோதனையிட்டபோது அவர் தான் அணிந்திருந்த துப்பட்டாவில் 25 தங்கச் சங்கிலிகளை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அவரிடம் நடத்திய சோதனையில் மொத்தம் 13 கிலோ எடை கொண்ட ரூ.4 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்ட்டது. அந்தப் பெண்ணை கைது செய்து விசாரித்ததில் அவர் கர்நாடகாவின் சிக்மகளூரைச் சேர்ந்தவர் என்று தெரிந்துள்ளது.

அடுத்த செய்தி