ஆப்நகரம்

Chennai Book Fair 2021: பீச் ரோட்டில் சென்னை‘வாசி’ மாரத்தான் நடத்தும் பபாசி

பெசண்ட் நகர் பீச்சில் சென்னை புத்தகத் திருவிழா சார்பில் மாரத்தான் நடைபெற உள்ளது.

Samayam Tamil 9 Feb 2021, 8:52 am
ஆண்டுதோறும் பொங்கலை ஒட்டி நடைபெறும் சென்னை புத்தகக் கண்காட்சியானது இந்த ஆண்டு கொரோனா தடை காரணமாக பிப்ரவரி-மார்ச் மாதம் நடைபெற உள்ளது. இந்நிலையில், புத்தக் கண்காட்சியை முன்னிட்டு வாசிப்பு விழிப்புணர்வு மாரத்தான் ஒன்று அபாசி அமைப்பின் சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது.
Samayam Tamil cbf marathon


இது தொடர்பாக பபாசி வெளியிட்டுள்ள தகவல் குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது, “44ஆவது சென்னை புத்தகக் காட்சியை முன்னிட்டு சென்னை 'வாசி' என்ற முழக்கத்தில் மினி மராத்தான் (Run to Read) 21.2.2021 காலை 6 மணிக்கு பெசன்ட் நகர் பீச்-ல் நடைபெறும். (அனைவரும் 5.30 மணிக்கு முருகன் ஒட்டல் அருகே வந்து பதிவு எண் கொடுத்து தொப்பி பனியன் பெற வேண்டும்).

இதில் வாசகர், எழுத்தாளர், பதிப்பாளர், பத்திரிக்கையாளர்கள் என அனைவரும் பங்கேற்று சிறப்பிக்க வேண்டுகிறோம். இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தை பூர்த்தி செய்து எங்கள் திட்டமிடலுக்கு உதவிட வேண்டுகிறோம்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி பத்மாவதி தாயாருக்கு தி.நகரில் கோயில்... 30 கோடி ரூபாய் இடத்தை தானம் அளித்த நடிகை!

உலகப்புகழ் பெற்ற சென்னை புத்தகத் திருவிழா இந்த ஆண்டு நடைபெறுமா இல்லையா என்ற கேள்வி எரும் வருத்தமாக இருந்த நிலையில், தற்போது புத்தகத் திருவிழா கொரோனா கட்டுப்பாடுகளுடன் நடைபெற உள்ளது என்பதே வாச்கர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி என்கின்றனர் வாசக ஆர்வலர்கள்.

அடுத்த செய்தி