ஆப்நகரம்

Ration Shops: ரேஷன் கடைகளில் கைரேகைப்பதிவு நிறுத்தம்... இதுதான் காரணமா?

சென்னையில் உள்ள பல ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் கருவி, 'சர்வரில்' தொழில்நுட்ப பிரச்னை ஏற்பட்டது.அந்த நிறுவனத்தின் ​​சர்வர் சரி ஆகும்வரை இப்படி கைரேகைப் பதிவு செய்வது நிறுத்தப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 23 Jan 2021, 11:25 am
நாடு முழுக்க ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அமலுக்கு வந்த நிலையில், பொருள் வழங்குவதைப் பதிவு செய்து கொள்வதில் இருக்கும் சிரமங்களைக் குறைப்பதற்காக, கைரேகைப் பதிவு முறை கொண்டுவரப்பட்டது.
Samayam Tamil ration shops


இந்த மாதம் தமிழக அரசின் பொங்கல் பரிசுகள் வழங்கப்பட்டதையடுத்து, இம்மாதத்திற்கான வழக்கமான பொருட்கள் வினியோகம், 18ஆம் தேதிதான் துவங்கியது. அவை, கார்டுதாரர்களின் கைரேகையை பதிவு செய்து வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சில தினங்களாக, பல ரேஷன் கடைகளில் உள்ள விற்பனை முனைய கருவியின் இயக்க, 'சர்வரில்' தொழில்நுட்ப பிரச்னை ஏற்பட்டது. இதனால், தற்போது, கைரேகையை பதிவு செய்வது, தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, பழைய முறைப்படி பொருட்கள் வழங்கப்படுகின்றன.

ராட்சத பேனர்களால் மக்களை பயமுறுத்தும் அதிமுக...

இனி அந்த நிறுவனத்தின் சர்வர் சரி ஆகும்வரை இப்படி கைரேகைப் பதிவு செய்வது நிறுத்தப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி