ஆப்நகரம்

நிர்வாகி வெட்டிக்கொலை; சடலம் முன் பாஜக தலைவர் செல்பி!

கொலை செய்யப்பட்ட பாஜக நிர்வாகியின் சடலத்துக்கு முன்பாக மாநில இளைஞர் அணி தலைவர் செல்பி எடுத்துக்கொண்ட சம்பவம் கட்சியினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

Samayam Tamil 25 May 2022, 11:04 pm
சென்னை, சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்தவர் பாலசந்தர். பாஜக எஸ்.சி/எஸ்டி பிரிவு மத்திய சென்னை மாவட்டத் தலைவராக இருந்து வந்தார். இவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு இருந்ததால் பாதுகாப்புக்கு பாலகிருஷ்ணன் என்கிற காவலர் நியமனம் செய்யப்பட்டு இருந்தார்.
Samayam Tamil சடலத்தின் முன் செல்பி
சடலத்தின் முன் செல்பி


நேற்று இரவு பாலசந்தர் சிந்தாதிரிப்பேட்டை சாமி நாயக்கன் தெருவுக்கு வந்துள்ளார். அங்கு பாலசந்தர் நின்று பேசிக்கொண்டிருந்தபோது காவலர் பாலகிருஷ்ணன் அருகே இருந்த டீக்கடைக்கு சென்று இருந்தார்.

அப்போது திடீரென பைக்கில் வந்த மர்ம கும்பல் மறைத்து வைத்திருந்த ஆயுதத்தால் பாலசந்தரை சரமாரியாக வெட்டி துடிக்க துடிக்க கொலை செய்து விட்டு தப்பி சென்றுவிட்டது.


தகவலறிந்து சிந்தாதிரிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாலச்சந்தர் உடலை கைப்பற்றி பிரதேச பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர்.

ஜி ஸ்கொயரும்.. கோபாலபுரம் குடும்பமும்; திமுகவை பங்கம் செய்யும் அண்ணாமலை!

இந்நிலையில் படுகொலை செய்யப்பட்ட பாஜக நிர்வாகி பாலச்சந்தர் உடலுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். இதன் பிறகு அண்ணாமலை அங்கிருந்து சென்றார்.

அண்ணாமலை சென்ற அடுத்த சில நொடிகளில், கொலை செய்யப்பட்ட நிர்வாகி சடலத்துக்கு முன்பு பாஜக இளைஞரணி தலைவர் வினோஜ். பி செல்வத்துடன் ஒரு பெண் செல்பி எடுத்துக்கொண்டார்.

பதற வைத்த பாஜக..திமுக அதிர்ச்சி; மேயருக்கு திடீர் நெருக்கடி!

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஏற்கனவே பாஜக என்றாலே ‘போட்டோ ஷூட்’ என்று சமூக வலைதளவாசிகள் கிண்டலடிப்பது வழக்கம்.

அப்படி இருக்கும்போது சொந்த கட்சியின் நிர்வாகி கொலை செய்யப்பட்டு கிடக்கும் நிலையில் சடலத்துடன் பாஜக மாநில இளைஞரணி தலைவரே செல்பி எடுத்து இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

அடுத்த செய்தி