ஆப்நகரம்

புளுவேல் கேம்: தற்கொலை செய்ய சென்னை வந்த இளைஞர்!

புளுவேல் கேம் விளையாட்டை விளையாடிய 17 வயது இளைஞர் தற்கொலை செய்துகொள்ள சென்னை வந்துள்ளார். அவரை ரயில்வே பாதுகாப்பு படையினர் மீட்டுள்ளனர்

TOI Contributor 5 Nov 2017, 4:24 pm
சென்னை: புளுவேல் கேம் விளையாட்டை விளையாடிய 17 வயது இளைஞர் தற்கொலை செய்துகொள்ள சென்னை வந்துள்ளார். அவரை ரயில்வே பாதுகாப்பு படையினர் மீட்டுள்ளனர்.
Samayam Tamil blue whale challenge west bengal teenager comes to chennai to commit suicide rescued
புளுவேல் கேம்: தற்கொலை செய்ய சென்னை வந்த இளைஞர்!


மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் புளுவேல் கேம் விளையாட்டை விளையாடியுள்ளார். அந்த கேமின் அட்மின் அவரை ரயிலில் சென்னைக்குச் செல்லுமாறு கூறியுள்ளார்.

இதனையறிந்த டெல்லி போலீஸார், அந்த இளைஞரின் படத்தை வாட்ஸ்அப்பில் சென்னை ரயில்வே போலீஸுக்கு அனுப்பியுள்ளனர். இதனையடுத்து, கோரமண்டல் ரயிலில் மேற்கு வங்காளத்திலிருந்து சென்னைக்கு வந்த அந்த இளைஞரை போலீஸார் பிடித்து, அவரது பெற்றோருக்கு தகவல் அனுப்பியுள்ளனர்.

தற்போது, அவருக்கு குழந்தைகள் நல மையத்தில் ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது. அவர் பழைய நிலைக்குத் திரும்பியது அவரது பெற்றோருடன் அனுப்பிவைக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Blue Whale Challenge: West Bengal teenager comes to Chennai to commit suicide, rescued

அடுத்த செய்தி