ஆப்நகரம்

காணாமல்போன சிறுமி சடலமாக மீட்பு

அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து காணமல்போன 7 வயது சிறுமி மாங்காடு அருகே கடந்த ஞாயிற்றுக்கிழமை சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TNN 8 Feb 2017, 11:20 am
சென்னை: அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து காணமல்போன 7 வயது சிறுமி மாங்காடு அருகே கடந்த ஞாயிற்றுக்கிழமை சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil body of missing girl recovered accused arrested
காணாமல்போன சிறுமி சடலமாக மீட்பு


சிறுமி ஹாசினியை தனியாக வீட்டில் விட்டுவிட்டு அவரது பெற்றோர்கள் ஷாப்பிங் சென்றிருந்தனர். வீட்டிற்கு வந்த பிறகு சிறுமி காணாமல்போனதையடுத்து அவர்களது பகுதியில் தேடிய பெற்றோர்கள் பின்னர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இது தொடர்பாக விசாரணை நடத்திய காவல்துறையினர் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், சிறுமி குடியிருப்புப் பகுதியை விட்டு வெளியே போகவில்லை. இதனிடையே, அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தியதில், 22 வயது மதிக்கத்தக்க நபர் மீது சந்தேகம் எழுந்ததையடுத்து, அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

ஜஷ்வந்த் எனும் இளைஞர், சிறுமியைக் கடத்தி, அவரது பெற்றோர்களிடம் இருந்து பணம் பறிக்க திட்டமிட்டதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதற்காக சிறுமியைக் கடத்திக் கொண்டு தான் வசித்துவந்த வீட்டிற்கு அழைத்துச் சென்றதாகவும், சிறுமி கூச்சல் போடாமல் இருக்க வரத்து வாயை மூடியபோது, சிறுமி மூச்சு திணறி உயிரிழந்ததாக ஜஷ்வந்த் தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து சிறுமியின் உடலை ஒரு பையில் வைத்து அதனை அருகில் உள்ள புதருக்குள் வீசிவிட்டு பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டதாக கூறினார். இதையடுத்து, மாங்காடு போலீசார் அந்த இளைஞனை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

A seven-year-old girl, who went missing from her apartment complex on Sunday, was found murdered near Mangadu on late Tuesday night.

அடுத்த செய்தி