பிரபல நடிகரின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
நடிகர் விக்ரம் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
Samayam Tamil 30 Nov 2020, 10:43 pm
சென்னை காவல்கட்டுப்பாட்டு அறையை இன்று காலை தொடர்பு கொண்ட நபர் ஒருவர் நடிகர் விக்ரம் வீட்டில் வெடிகுண்டு வைத்துள்ளதாக கூறி இணைப்பை துண்டித்துள்ளார். உடனே இதுதொடர்பாக திருவான்மியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்..
உடனே திருவான்மியூர் போலீசார் மோப்ப நாய், வெடிகுண்டு நிபுணர்களுடன் பெசன்ட் நகர் ஆரண்டைல் சாலையில் உள்ள நடிகர் விக்ரம் வீட்டிற்கு சென்றனர்.
வீட்டில் குடும்பத்தினருடன் இருந்த நடிகர் விக்ரம், சோதனைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்ததாக கூறப்படுகிறது. சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது.
அதிமுக கொடி கம்பம் நடும் பணி...தேமுதிக நிர்வாகி உயிரிழப்பு!
இதுதொடர்பாக திருவான்மியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வழக்கமாக நடிகர்கள், அரசியல் தலைவர்களை குறிவைத்து வெடிகுண்டு மிரட்டல் விடும் மரக்காணத்தை சேர்ந்த நபரின் வேலைதானா இதுவும் என்று செல்ஃபோன் எண்ணை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உடனே திருவான்மியூர் போலீசார் மோப்ப நாய், வெடிகுண்டு நிபுணர்களுடன் பெசன்ட் நகர் ஆரண்டைல் சாலையில் உள்ள நடிகர் விக்ரம் வீட்டிற்கு சென்றனர்.
வீட்டில் குடும்பத்தினருடன் இருந்த நடிகர் விக்ரம், சோதனைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்ததாக கூறப்படுகிறது. சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது.
அதிமுக கொடி கம்பம் நடும் பணி...தேமுதிக நிர்வாகி உயிரிழப்பு!
இதுதொடர்பாக திருவான்மியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வழக்கமாக நடிகர்கள், அரசியல் தலைவர்களை குறிவைத்து வெடிகுண்டு மிரட்டல் விடும் மரக்காணத்தை சேர்ந்த நபரின் வேலைதானா இதுவும் என்று செல்ஃபோன் எண்ணை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.