ஆப்நகரம்

லவ் டார்ச்சர்... வீடியோகால் பேசியபடி இளம்பெண் தற்கொலை!

காதலிக்க வற்புறுத்திய ராணுவ வீரரின் தொல்லை தாங்காமல் வீடியோ காலில் லைவ்வாக இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 5 Dec 2020, 10:59 pm
சென்னை பள்ளிக்கரணை அடுத்த பெரும்பாக்கம், எழில் நகரை சேர்ந்தவர் பாரதி(24) இவர் கடந்த 2 ஆம் தேதி தனது வீட்டின் குளியலறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
Samayam Tamil இளம்பெண் தற்கொலை
இளம்பெண் தற்கொலை -சென்னை


முதற்கட்ட விசாரணையில் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோர் தெரிவித்தனர். அவரது செல்ஃபோனை பள்ளிக்கரணை போலீசார் கைப்பற்றி விசாரித்தபோது அதில் கிடைத்த வீடியோ ஒன்று போலீசாருக்கோ அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அந்த வீடியோவில் எதிர்முனையில் ஆண் ஒருவர் இவருக்கு வீடியோ கால் செய்து பேசியுள்ளார். இவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்வதும் பதிவாகியுள்ளது. பின்னர் எதிர்முனையில் பேசியவரிடம் போலீசார் பாரதியின் செல்ஃபோனில் இருந்து குறுந்தகவல் அனுப்பி பேச்சுக் கொடுத்து அந்த நபரை விருதுநகர் சென்று கைது செய்தனர்.

திருட வந்த வீட்டில் ஆம்ப்லேட் சமைத்த நபர்கள்..! தாம்பரம் அருகே பரபரப்பு

விசாரணையில் அவர் விருதுநகர் மாவட்டம், ஆலங்குளத்தை சேர்ந்த முத்து குமரேசன்(32) என்பதும், ராணுவத்தில் சிப்பாயாக பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது. மேலும் ஏற்கெனவே அவருக்கு திருமணம் ஆனதும், ஹலோ ஆப் மூலம் அவருக்கு பாரதியுடன் பழக்கம் ஏற்பட்டதும் தெரிய வந்தது.

இந்த பழக்கத்தை சாதகமாக பயன்படுத்தி, பாரதியை நேரில் வரவழைத்து பேசி பழகி புகைப்படம் எடுத்துக் கொண்டு தொடர்ந்து காதலிக்குமாறு பாரதியை குமரேசன் வற்புறுத்தியுள்ளார்.

நடுரோட்டில் பற்றி எரிந்த கார்... நள்ளிரவில் பரபரப்பு!

இல்லையெனில் குடும்பத்தினரை கொன்று விடுவதாகவும் அலர் மிரட்டியதாகவும் தெரிகிறது. இதனால் மனமுடைந்த பாரதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்த பள்ளிக்கரணை போலீசார் குமரேசனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.

அடுத்த செய்தி