ஆப்நகரம்

மெட்ரோ ரயிலில் பயன்படும் கிருமிநாசினி பாதுகாப்பானதா?

கொரோனா தடுப்புப்‌ பணியில்‌ வேதியியல்‌ ஊறுவிளைவிக்காத கிருமிநாசினியை‌ சென்னை மெட்ரோ இரயில்‌ நிறுவனம்‌ பயன்படுத்துவதாக மெட்ரோ நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

Samayam Tamil 21 Oct 2020, 1:30 pm
கொரோனா கால ஊரடங்குத்‌ தளர்வுகளை தொடர்ந்து கடந்த செப்டம்பர்‌ 7ஆம்‌ தேதி முதல்‌ சென்னை மெட்ரோ இரயில்‌ சேவைகள்‌ துவக்கப்பட்டு பொதுமக்கள்‌ பயன்பாட்டில்‌ உள்ளன. இந்த பெருந்தொற்று காலத்தில்‌ நோய்ப்‌ பரவலைத்‌ தடுக்கவும்‌, பயணிகளின்‌ பாதுகாப்பான பயணத்திற்காகவும்‌ பல்வேறு, நெறிமுறைகளை மத்திய, மாநில அரசுகளின்‌ வழிகாட்டுதலின்படி சென்னை மெட்ரோ இரயில்‌ நிறுவனம்‌ செயல்படுத்தி வருகிறது.
Samayam Tamil chennai metro rail


இரயில்பெட்டிகள்‌ மற்றும்‌ இரயில்‌ நிலையங்கள்‌ அனைத்தும்‌ கிருமிநாசினிகள்‌ கொண்டு உரிய இடைவெளியில்‌ தூய்மைப்படுத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறு தூய்மைப்படுத்தும்‌. போது இந்தியாவிலேயே முதன்‌ முயற்சியாக வேதியியல்‌ ஊறுவிளைவிக்காத
நீர்வடிவிலான கிருமிநாசினியை பயன்படுத்துகிறது சென்னை மெட்ரோ இரயில்‌ நிறுவனம்‌.

மா& நுட்பம்‌ மூலம்‌ வெளிப்படும்‌ பிராணவாயு கலந்த நுண்ணிய நிறமற்ற திரவ (8-௦ - 80௯௨ பெயஸ்ப்2ம) வடிவிலான கிருமிநாசினிகள்‌, வேதியியல்‌ தன்மையை முற்றிலும்‌ தவிர்க்கிறது. இந்த கிருமிநாசினி பயன்படுத்தும்‌ போது கைகளில்‌ மட்டுமல்ல சுற்றுப்புறப்பகுதிகளிலும்‌ காற்றின்‌ மூலம்‌ கிருமிகள்‌
மற்றும்‌ வேதி பரவலை தடுக்கிறது.

மெட்ரோ ரயில் விரிவாக்க பணிகள் தீவிரம்: நிலையங்களின் பெயர் மாற்றம்!

இது மிகவும்‌ தூய்மையான, பாதுகாப்பான, நீடித்த கிருமிநாசினி முறையாகும்‌. இதுவரை அதிநவீன மருத்துவமனைகள்‌ மற்றும்‌ பாதுகாப்பு அமைப்புகளில்‌ மட்டும்‌ பயன்படுத்தப்பட்டு வந்த இந்த தொழில்நுட்பத்தை இந்தியாவில்‌ உள்ள மெட்ரோ நிறுவனங்களில்‌ முதன்‌
முறையாக சென்னை மெட்ரோ இரயில்‌ நிறுவனம்‌ மெட்ரோ இரயில்கள்‌ மற்றும்‌.

மெட்ரோ நிலையங்களுக்கு ஏற்ப செறிவூட்டப்பட்டு பயணிகளின்‌ பாதுகாப்பிற்காக பயன்படுத்தி வருகிறது.
சாதாரணமான சுத்திகரிக்கப்பட்ட நீர்கலவை கொண்டு பயன்படுத்தப்படும்‌. இந்த தொழில்நுட்பம்‌ வழக்கமான குளோரின்‌ பயன்பாடுகளை விட 51 சதவீதம்‌. கூடுதல்‌ சக்திவாய்ந்தது மற்றும்‌ பாதுகாப்பானதாகும்‌.

அரசுப் பள்ளிகளை நோக்கி படையெடுக்கும் பெற்றோர்கள்: கொரோனாவால் வந்த மாற்றம்!

பிராணவாயு கலந்த இந்த திரவ கிருமிநாசினியின்‌ பயன்கள்‌

*தீவிரமாக செயல்படக்கூடியது. கிருமிகள்‌ கொல்லப்படும்போது வெளிப்படும்‌ நச்சுக்களை தடுக்கும்‌.
* கிருமிக்கொல்லி - நீர்த்துவளைகளில்‌ வெளிப்படும்‌ கிருமிகள்‌ மட்டுமல்ல சுற்றுப்புறங்களில்‌ காற்றில்‌ கலந்த கிருமிகளையும்‌ கொல்லக்கூடியது.
*பயன்பாட்டின்‌ போது கைகள்‌ மற்றும்‌ உடல்‌ உறுப்புகளில்‌ தங்கினாலும்‌ அதனால்‌ ஊறுவிளைவிக்காது.
*குறைந்த செலவில்‌ நிறைந்த பலன்‌ அளிக்கக்கூடியது.
*தேவைக்கும்‌ சூழ்நிலைக்கும்‌ ஏற்ப உற்பத்தி செய்துகொள்ள முடியும்‌.
*சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகும்‌.

அடுத்த செய்தி