ஆப்நகரம்

4 ஆண்டுகள் முன் கண்டெடுத்த சிலையை போலீசாரிடம் ஒப்படைப்பு

செங்கல்சூளை வைத்திருக்கும் ஒருவர் 4 ஆண்டுகளுக்கு முன் கண்டெடுத்த பெருமாள் சிலையை சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்துள்ளார்.

Samayam Tamil 10 Oct 2018, 6:34 pm
செங்கல்சூளை வைத்திருக்கும் ஒருவர் 4 ஆண்டுகளுக்கு முன் கண்டெடுத்த பெருமாள் சிலையை சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்துள்ளார்.
Samayam Tamil 66149342


செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த கணேஷ்ராம் என்பவர் செங்கல் சூளை நடத்திவருகிறார். நான்கு ஆண்டுகள் முன் அவரது செங்கல் சூளைக்கு மண் இறக்கும் போது மண்ணில் புதைந்திருந்த பெருமாள் சிலையைக் கண்டெடுத்துள்ளார்.

4 அடி உயரம் கொண்ட அந்த கருங்கல் சிலையை கடந்த 4 ஆண்டுகளாக அங்கேயே வைத்து தினமும் பூசை செய்து வந்திருக்கிறார். அண்மையில் சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் பொன். மாணிக்கவேல் பொதுக்கள் தங்களிடம் அனுமதியின்றி வைத்திருக்கும் சிலைகள் மற்றும் பழமையான பொருட்களை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இதனையடுத்து கணேஷ்ராம் தன்னிடமிருந்த சிலையை செங்கல்சூளை மேனேஜர் வெங்கடேசனுடன் எடுத்துச்சென்று போலீசாரிடம் வழங்கியுள்ளார். இது குறித்து கூறிய போலீசார் ஒருவர், “சிலையை ஆய்வுசெய்து பழமையான சிலை என்று உறுதியானால், சிலையை இந்து சமய அறநிலையத்துறை வசம் ஒப்படைத்துவிடுவோம்” என்று கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்