ஆப்நகரம்

ஏரிக்குள் அண்ணன், தம்பி வெட்டி படுகொலை; நள்ளிரவில் ஸ்ரீபெரும்புதூரில் நடந்த பயங்கரம்!

ஸ்ரீபெரும்புதூர் அருகே மாடம்பாக்கம் ஏரியில் அண்ணன், தம்பி வெட்டிக்கொலை செய்யப்பட்டனர்.

Samayam Tamil 1 May 2021, 3:22 pm
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே படப்பை, மாடம்பாக்கத்தை சேர்ந்தவர்கள் இஸ்மாயில் (35), இம்ரான் (33), இமாம் அலி (18). மூவரும் சகோதரர்கள். இவர்கள் மூவர் மீது கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் வழிப்பறி, அடிதடி, வீடு புகுந்து திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது.
Samayam Tamil கொலை நடந்த இடத்தை போலீசார் ஆய்வு செய்கின்றனர்
கொலை நடந்த இடத்தை போலீசார் ஆய்வு செய்கின்றனர்


இந்நிலையில் நேற்று மாடம்பாக்கம் ஏரியில் இஸ்மாயில், இமாம் அலி ஆகிய இருவரும் பலத்த வெட்டு காயங்களுடன் இறந்து கிடந்தனர். தகவலறிந்து மணிமங்கலம் போலீசார் அங்கு சென்று இருவரது சடலங்களை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

நாளை தேர்தல் ரிசல்ட்; ஆள் பிடிக்கும் வேலை தொடங்கியது

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:

இஸ்மாயில் தனது தம்பிகள் இம்ரான், இமாம் அலி ஆகியோருடன் நேற்று முன்தினம் இரவு மாடம்பாக்கம் ஏரியில் மது அருந்தியுள்ளார். அப்போது மாடம்பாக்கம் பகுதியை சேர்ந்த ரமேஷ் (33) என்பவர் ஏரிக்கு சென்றுள்ளார்.

இதை பார்த்த இஸ்மாயில் தனது தம்பிகளுடன் சேர்ந்து கத்தியை காட்டி மிரட்டி ரமேஷின் மொபைல் போனை பறிக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. உடனே ரமேஷ் அங்கிருந்து தப்பியோடி தனது நண்பர்களிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து ரமேஷின் நண்பர்கள் ராஜி (39), முத்து (38), பொன்னையா (32) ஆகியோர் ராமேஷை அழைத்துக்கொண்டு உருட்டு கட்டைகளுடன் மீண்டும் மாடம்பாக்கம் ஏரிக்கு சென்றுள்ளனர்.

நள்ளிரவில் ஆயுதத்துடன் கும்பல்; ஓட... ஓட... விரட்டிய தெருநாய்கள்!

பின்னர், இஸ்மாயிலை மடக்கி பிடித்து அவரிடம் இருந்த கத்தியை பறித்து, அவரை வெட்டி கொலை செய்துள்ளனர். இதை தடுக்க வந்த இமாம் அலியையும் வெட்டி கொலை செய்தனர். இதை பார்த்த இம்ரான் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

இவ்வாறு நடந்ததாக தெரியவந்ததை அடுத்து ரமேஷ், முத்து, ராஜி, பொன்னையா ஆகிய 4 பேரையும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.

அடுத்த செய்தி