ஆப்நகரம்

பேருந்தின் தானியங்கி கதவு இடித்ததில் இளைஞர் பலி

தானியங்கி கதவு மூடியதால் பேருந்திலிருந்து தவறி விழுந்த இளைஞன் பரிதாபமாக பலியாகியுள்ளார்.

TNN 22 Sep 2017, 12:09 pm
சென்னை : தானியங்கி கதவு மூடியதால் பேருந்திலிருந்து தவறி விழுந்த இளைஞன் பரிதாபமாக பலியாகியுள்ளார்.
Samayam Tamil bus accident in chennai
பேருந்தின் தானியங்கி கதவு இடித்ததில் இளைஞர் பலி


திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் பஷீர் அகமது. இவரது மகன் முஸ்தக் நிஜாமுதின் (26) பி,காம் படித்தவர். இவர் வேலைக்கான நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள சென்னை வந்தார். நேர்முகத் தேர்வு முடித்துவிட்டு, ஆலந்தூரில் உள்ள அவரது நண்பர்களை சந்தித்து விட்டு, வீடு திரும்ப கோயம்பேடு செல்ல ஆலந்தூர் எம்.கே.என் சாலை -ஜிஎஸ்டி சாலை சந்திப்பில் பஸ் ஏறினார்.

பயணிகள் ஏறிவிட்டதாக கருதிய பேருந்து ஓட்டுனர். தானியங்கி கதவை மூடியுள்ளார். அப்போது பேருந்தில் ஏற முயன்ற நிஜாமுதினின் தலையில் கதவு பலமாக மோதியது. இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அவரை கிண்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழ்ந்தார்.

இதுகுறித்து பரங்கிமலை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி